விதையே மரம்

என் மனதில் இக்கணத்திலிருக்கும் வெறுப்பெனும் விதையை உற்று நோக்கிச் சொல்கிறேன், "பல்கிப் பெருகி வனமாய் ஆவாய்".

விதையிலிருந்து விதை முளைப்பதில்லை.  வெறுப்பாகிய விதை வளர்ந்து அழிந்து விருப்பாகிய மரமாய் உருமாறும்.  விதை மரமாயும், மரம் மேலும் ஆயிரமாயிரம் விதையாயும் மாறும்.

"என்னிலேயே இருந்து, வனமாய் ஆவாய், என் பிரிய விதையே!"

கருத்துகள்