இடுகைகள்

டிசம்பர், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுக துக்கே, சமே

கீர்த்திவாசனின் இந்தப்பதிவுக்கு இது பதில். முதலில் அதைப் படிச்சிருங்க. டாக்டர் ஊசி போடுகிறார். பயங்கரமாய் வலிக்கிறது. ஒரு வயதுக் குழந்தை என்ன செய்யும்? அழும். அழுவது துன்பத்திலிருந்து தப்பிக்க ஏற்கெனவே குழந்தைக்கு உதவியிருப்பதால், இந்த வலியிலிருந்து தப்பவும் குழந்தை அழுகிறது. நமக்கு ஊசி போடுகையில் நாம் என்ன செய்வோம்? இந்த வலி நிரந்தரமல்ல என்று நமக்குத் தெரியும். "ரொம்ப வலிக்குதாங்க?" என்று மனைவி கேட்டால் "ஆம்" என்றுதான் சொல்வோம். நமக்கும் தெரியும், மனைவிக்கும் தெரியும், டாக்டருக்கும் தெரியும், சில நிமிடங்களில் வலி மறைந்துவிடும் என்று. இந்த அணுகுமுறை பொருந்தும் என்று நினைக்கிறேன். "துன்பம் நேர்கையில் துன்பப்படலாம், புலம்பலாம், பிதற்றலாம், அழலாம். ஆனால் அந்தத் துன்பம் (மற்ற இன்பத்தைப் போலவே) நிரந்தரம் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்" என்று பரமாத்மா சொல்லியிருக்கலாம். "நல்ல விஷயத்துக்காக அனுபவிக்கிற தற்காலிகத் துன்பம்" பற்றி நான் சொல்வதாகத் தவறாக நினைக்க வேண்டாம். நான் சொல்வதற்கும் நல்லது-கெட்டதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு திருட

எங்கே பிராமணன்

இந்தக் கதையைப் படித்ததும் மனதில் என்னவோ தோன்றியது -- எங்கேயோ கேட்ட குரல் மாதிரி ஒரு உணர்வு. முதல் இரண்டு முறை படித்தும் ஏனென்று புரியவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் படித்தபோது தான் என்னவென்று புரிந்தது. *ஓரளவுக்கு* இந்தக் கதையையொட்டிய சம்பவம் என் வாழ்விலும் நடந்தது என்பதுதான் அது. கிட்டத்தட்ட எல்லாரையும் போலவே நானும் காதலித்தேன். கிட்டத்தட்ட எல்லாரையும் போலவே என் காதலும் நிராகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட எல்லாரையும் போலவே நானும் ரொம்ப அலட்டிக்கொள்ளவில்லை (இப்படிச் சொன்னால் அது உண்மையாய்த்தான் இருக்குமா என்று தெரியவில்லை) . அந்தப்பெண் எனக்கு ஒரு நல்ல தோழி. அவ்வப்போது அவளுக்கு நான் சில உதவிகள் செய்வதுண்டு. என்னை எதுவோ வாங்கிவரச் சொன்னவள், என்னிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தாள். "காதலி" கையால் கொடுத்த நூறு ரூபாய்க்கு பல கோடி மதிப்பல்லவா? நானும் பொக்கிஷமாய் அதை வைத்திருந்தேன். அந்தப் பணம் என்னிடம் வந்த முதல் வாரம், மூன்று முறை அதை எடுத்து எடுத்துப் பார்த்தேன். அடுத்த வாரம் ஒரே ஒருமுறை தான் பார்த்தேன். அப்புறம் அதை எப்போதாவது நினைத்துக் கொள்வதுண்டு. எட

குருதிப்புனல் -- விக்ரம் டப்பிங் பேசினாரா?

குருதிப்புனல் படத்தில் தீவிரவாதி நரசிம்மனுக்கு (நம்பர் 2 ஆள் -- பத்ரி இல்லாத நேரத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவன்) டப்பிங் பேசியது (நடிகர்) விக்ரமா? தெரிந்தால் சொல்லுங்கள்.

அவ்வளவுதானா?

பிரியும்போதுதான் தெரிகிறது - நிரந்தரமென்று நம்பிவிட்டதும், வெறுப்பதும் ஒருவகை உறவுதானென்பதும்.