இடுகைகள்

ஜனவரி, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குருவும் சீடனும்

மேன்மையான குருநாதர்களைக் கொல்வதற்குப் பதில் பிச்சையெடுத்து உண்பது சிறந்தது. உலகியல் விருப்பமுள்ள ஆசிரியர்களைக் கொன்றபின் அவர்களின் உதிரம் படிந்த போகங்களைத் தானே இங்கு நான் அடைய முடியும்? (215) என்று கீதை இரண்டாம் அத்தியாயத்தில் சொல்கிறது. ஒரே சுலோகத்திலேயே அர்ஜுனன் குருக்களை மகானுபவர்கள் என்றும் பொருளாசை கொண்டோர் என்றும் ஏன் அழைக்கிறான்? இதற்குப் பதில் சொல்ல முடியுமானால் உங்களுக்கு கீதை புரிந்திருக்கிறது என்று நான் சம்மதிக்கிறேன். ••••••••••• கேள்வி: நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? குரு: நம்பிக்கை என்ற சொல்லே சரியில்லையே. நான் ஒரு விஞ்ஞானி. உண்மையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கீகரிப்பதுதான் என்னுடைய வழக்கம். கடவுள் இருப்பது கடவுள் குறித்த வரையறை மூலமே. அதனால் அந்த வரையறை தவறா சரியா என்று கேட்க வேண்டும். அப்படியென்றால் கடவுளுக்கு நான் கொடுக்கும் வரையறையை முதலில் தேட வேண்டும். உங்களுக்குத் தவறு நடக்கும்போதெல்லாம் எது சரியாகவே இருக்கிறதோ அதுதான் கடவுள். What is that which is right when you are wrong is God. ••••••••••• இவை குருவும் சீடனும் என்னும் எனி இந்தியன் பத

குழப்பம் leads to புலம்பல்

இது வரை என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே நான் மட்டும் சம்பந்தப் பட்டவை. இன்னும் சில மாதங்களில் நான் ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும். என் திருமணம் பற்றிய முடிவு அது. பல்வேறு காரணங்களுக்காக நான் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வதே எனக்கு சரிப்படும் என்று நினைக்கிறேன். அவற்றுள் முக்கியமான சில: யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை வீட்டில் பார்த்து பேசி மணம் முடிப்பது என்பதை நினைத்தாலே எனக்கு அருவெறுப்பாயுள்ளது. "பெண்ணுக்காக திருமணம்" என்றல்லாமல் "திருமணத்திற்காக பெண்" என்ற நிலையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. பஸ்ஸில் ஆபிஸ் போக கஷ்டமாக இருக்கிறது என்று நான் வாங்கிய பைக்கிற்கும் நான் கூட வாழப்போகும் மனைவிக்கும் அப்புறம் என்ன வித்தியாசம் எஞ்சுகிறது? என்னைப் பொருத்தவரை திருமண வாழ்வில் மிக முக்கியமானது காதல். சிந்துபைரவி படம் என்னை ரொம்பவே பாதித்தது. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் எப்படிப்பட்ட நெருக்கம் இருக்க வேண்டும் என்பதையும் எப்படிப்பட்ட நெருக்கம் நடைமுறையில் சாத்தியம் என்பதையும் அந்தப்படம் தெளிவாகவே காட்டுகிறது. JKBக்கு அவரது மனைவி பைரவியின் மேல் இருப்பதும் காதல்தான்.