இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காரணங்கள்

பசி வரும்போதும் தூக்கம் வரும்போதும் அதற்கான காரணத்தை ஆராயாமல் பசியையும் தூக்கத்தையும் ஏற்றுக்கொள்ளும் நாம் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் மட்டும் காரணம் இல்லாமல் ஏன் ஏற்பதில்லை? காரணங்களேதும் இன்றி மனநிலையை ஏற்றுக்கொள்ளவும், பிறகு காரணங்களை நாடாமல் நேரடியாக மகிழ்ச்சியை நாடவும் பழகிக்கொண்டிருப்பதால் முன்பைவிடவும் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Wedding, marriage — என்ன வித்தியாசம்?

“வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு marriage. கண்டிப்பா வந்திருங்க” என்று திருமண அழைப்பிதழ் கொடுப்பது நம் ஊரில் சாதாரணம். ஆனால் marriage என்ற வார்த்தையை இவ்வாறு உபயோகிப்பது தவறு என்பது உங்களுக்குத் தெரியுமா? திருமண உறவு அல்லது சம்சாரம் என்பது கல்யாணம் ஆன நாளில் இருந்து வாழ்வு முடியும் வரை நீடிப்பது. அதுதான் marriage. அத்திருமண உறவு ஆரம்பிக்கும் விழா, கணவனும் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கும் அந்த விழா — அது wedding. ஆகவே wedding invitation என்பது சரி; marriage invitation என்பது தவறு. “வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு wedding. கண்டிப்பா வந்திருங்க” என்று உறவினரை அழைப்பதே சரியானது.

வீடு திரும்புதல்

12 வருடங்களாகிறது, நான் வீட்டைவிட்டுத் தனியாகத் தங்கியிருக்க ஆரம்பித்து. முன்பெல்லாம் வாழ்க்கையில் என்னென்னவோ செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்றும் ஆசையிருக்கும். பயணம் செய்ய வேண்டும் என்பது ஒரு தீராத ஆசை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் முடிந்த இடங்களுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் அண்டார்டிகா செல்வது, கப்பலில் நீண்ட பயணம் செய்வது, உலகிலேயே நீளமான சாலை முழுவதையும் பயணித்துக் கடப்பது போன்று பல நிறைவேறாத ஆசைகள் எப்போதும் இருந்து வருகின்றன. எவ்வளவுதான் முயற்சித்தாலும் இப்படி நிறைவேறாத சில ஆசைகள் இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. நிறைவேறாத ஆசைகள் பல இருந்தாலும் மனநிறைவுடன் வாழ முடியும் என்பதும் தெளிவாகிறது. வீட்டிலுள்ளவர்களோடு ஒரு நீண்ட சாலைப்பயணம் (roadtrip) செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சென்ற மாதம் குடும்பத்துடன் ராஜஸ்தான் சென்றோம். நல்ல பயணம். பல நாள் கழித்து இந்திய சாலைகளில் பயணம் செய்ததும், பல நாள் கழித்து அம்மா, அப்பா, அண்ணன்கள், பெரியம்மா, குழந்தைகள் எல்லோரையும் பார்த்ததும் மகிழ்ச்சியளித்தது. என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரிப் பயணங்கள

மன்னிப்புக் கோரல்

நான் பெரும்பாலான நேரங்களில் மன்னிப்புக் கேட்பதேயில்லை. ஏனென்றால் மன்னிப்புக் கேட்பது என்பது பெரும்பாலான நேரங்களில் பிரச்சனையைப் பூசி மெழுகவே பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்குச் சொல்கிறேன். எனக்கு நெருக்கமான ஒருவர் மன்னிப்புக் கேட்பது எப்போதுமே ஒரே மாதிரிதான்: “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்.” கொஞ்சம் யோசித்தாலே இந்த வாக்கியத்தின் அர்த்தமின்மை விளங்கும். ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அதில் இரண்டு பேருக்கிடையில் கருத்து வேறுபாடு. அந்த வேறுபாட்டைச் சரி செய்ய நினைப்பவர் “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்” என்று சொல்லிவிட்டு, பிரச்சனையே தீர்ந்துவிட்டதாய் நினைத்துக்கொள்கிறார். இதனால் பிரச்சனைகள் அப்போதைக்கு மறக்கப்படுகின்றனவே தவிர அவை தீர்க்கப்படுவதில்லை. உண்மையில் பிரச்சனையைத் தீர்க்க விரும்பும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? அந்தக் கருத்து வேறுபாடு என்ன என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். அதில் தனது வாதம் தவறானதே என்று தோன்றினால் அத்துடன் தன்னுடைய கருத்தை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். மன்னிப்புக் கேட்பதைவிடவும் இது முக்கியமானது ஏனென்றால் இந்த மன மாற்றம்தான

ஈஸ்வர அல்லா தேரே நாம்

படம்
ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரே நாம் நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். மத நல்லிணக்கத்தை மையக்கருவாகக் கொண்ட நாவல் என்றாலும் காந்தியம், காதல், சமூகம் என்று பலவற்றையும் விவாதிக்கும் நாவல். நாவலில் எனக்குப் பிடித்த வரிகள்: மனிதன் சம்பந்தப்பட்ட எல்லாமே மாயைதானே! உயர்நோக்கமுள்ள கல்வியும் ஞானமும் எளிமையான வாழ்வோடு இணைகிறபோது, எத்தகைய இழிநிலையிலிருந்த கடையனும் அந்தணனே ஆகிவிட மாட்டானோ? அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதே இல்லை. காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும். சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்! மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை. அவை மக்கினாலும் மடிந்து விடுவதில்லை. மனிதர் இல்லாத எந்தப் புனித இடமும் பாழ் அடைந்து விடுவதுதான் இயல்பு. நான் படிச்சவரைக்கும் பைபிள், குரான், ஜென்டவெஸ்தா எல்லாமே வேறு வேறு மத நூல்கள் என்று சொல்லப்பட்டாலும், ஒரு மாபெரும் புத்தகத்தின் பல அத்தியாயங்களைத் தனித்தனியே படிக்கிறதாகவே உணர்ந்தேன். அப்படி உணர்கிறவனை காந்தி மதத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லலாம். கொள்கைகளாலும் மரபுகளாலும் மதங்கள் அமைந்ததாகச் சொல

பூரண கும்பம்

“பெரியவர்கள் எழுந்தருளும்போது பூர்ணகும்பம் வைக்க வேண்டும்” என்று ஒரு சாஸ்திர விதி இருப்பதாக சடகோபன் ராமானுஜன் தன்னுடைய படமொன்றில் எழுதியிருக்கிறார். இதில் “பெரியவர்கள்” என்பவர்கள் பெரும்பாலும் இந்த மக்களின் வாழ்க்கை நலத்தை உயர்த்த ஏதேனும் செய்ய வல்லவர்களாக இருப்பார்கள். வளம் மிகுந்த ஓர் ஊருக்குப் பெரியவர் ஒருவர் வந்தால் கும்பத்தில் என்ன காண்பார்? நெய், பால் போன்ற விலையுயர்ந்த, வளத்தை வெளிக்காட்டும் திரவங்கள் கும்பங்களில் இருக்கும். அதே பெரியவர் வளம் குறைந்த ஒரு ஊருக்குப் போனால்? பெரும்பாலான கும்பங்களில் தண்ணீர் இருக்கும். தெரு வழியே செல்கையிலேயே மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இது ஒரு வழி. மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டு அறிவதைக் காட்டிலும் எளிமையான சிறந்த வழி.

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வழக்கமாகத் தண்ணீர் குடிக்கும் ஏரிக்கு வந்தது அந்த யானை.  அங்கு ஏரி முழுவதுமாக உறைந்து குடிக்க முடியாமல் போயிருந்தது.  கடந்த சில வாரங்களாகவே அளவுக்கு மீறிக் குளிர்ந்திருந்த ஏரி இப்போது இல்லாமலே போனது யானைக்கு ஏமாற்றமாக இருந்தது.  தாகத்துடனேயே திரும்பிச் சென்றுவிட்டது. சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே ஏரிக்கு யானை வந்தது.  அப்போதும் உறைந்தே இருந்த ஏரியிடம் யானை கேட்டது, “எல்லோருடைய தாகத்தையும் தீர்க்கும் புனிதமான பணி செய்யும் நீ இப்படி மாதக்கணக்கில் உறைந்து போகலாமா, இது நியாயம்தானா?” என்று. ஏரி சொன்னது, “நியாயமா என்று என்னைக் கேட்கிறாயா நீ?  எத்தனையோ வருடங்கள் நான் நீராக இருந்து உன்போன்ற விலங்குகளின் தாகம் தீர்த்தேன்.  என்னுள் மீன்களும் பாம்புகளும் தவளைகளும் தாவரங்களுமாக எத்தனையோ உயிரினங்கள் வாழ வகை செய்து கொடுத்தேன்.  இந்தப் பாழாய்ப்போன காற்றுக்கு என்ன கோபமோ, என்னால் தாங்கமுடியாத அளவு குளிராக வீசி இப்படி என்னை உறைய வைத்துவிட்டது.  என் மேல்மட்டத்தில் பல அடி கனத்துக்கு நான் உறைந்ததால் உன்போன்ற விலங்குகளுக்கு உதவ முடியாமல் போனாலும், ஆழத்தில் நான் இன்னும் நீராகவே இருந்து என்னுள் வாழும

மருத்துவம்

கடந்த சில மாதங்களாக என் வாயின் இரண்டு பக்கங்களிலும் காயமாகி இருந்தது.  சிட்னியில் வீட்டில் இருக்கும்தோறும் காயம் மட்டுப்படாமலே இருந்தது.  மருந்து போட்டால் கொஞ்சம் குறையும், ஆனால் ஓரிரு நாள்களிலேயே மீண்டும் வந்துவிடும்.  பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் காயம் சிலநாள்களிலேயே ஆறியது; சிட்னி திரும்பி வந்ததும் சிலநாள்களிலேயே காயம் பழையபடி திரும்பி வந்தது.  காயத்தைச் சுற்றிலும் எப்போதும் தோல் வறண்டிருக்கும். முதலில் நான் நினைத்தது என்னவென்றால் சிட்னியின் பருவநிலை காரணமாக என் தோல் வறண்டு போகிறது.  மிகுந்த வறட்சியால் தோல் வெடித்துக் காயம் உண்டாகிறது.  பயணம் செய்த இடங்களின் (கோவில்பட்டி, சான் ஃபிரான்சிஸ்கோ, பாஸ்டன்) பருவநிலையை — முக்கியமாக காற்றிலுள்ள ஈரப்பதத்தை (humidity) — சிட்னியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய மாறுதல் ஒன்றும் தெரியவில்லை.  அதனால் நான் நினைத்தது சரியான காரணம் இல்லை என்று தெரிந்தது.  ஆனாலும் வேறு எந்த வகையிலும் சிட்னியில் இருக்கும்போது மட்டும் வரும் காயங்களை விளக்க முடியவில்லை. சென்ற வாரம் தற்செயலாக எனக்குத் தோன்றியது.  ஒருவேளை நான் உபயோகிக்கும் சோப் எனது காயங்களுக்குக