இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காரணங்கள்

பசி வரும்போதும் தூக்கம் வரும்போதும் அதற்கான காரணத்தை ஆராயாமல் பசியையும் தூக்கத்தையும் ஏற்றுக்கொள்ளும் நாம் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் மட்டும் காரணம் இல்லாமல் ஏன் ஏற்பதில்லை? காரணங்களேதும் இன்றி மனநிலையை ஏற்றுக்கொள்ளவும், பிறகு காரணங்களை நாடாமல் நேரடியாக மகிழ்ச்சியை நாடவும் பழகிக்கொண்டிருப்பதால் முன்பைவிடவும் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.