குழந்தைகளும் நானும்

என் அண்ணன் சரவணனுக்கு சிறு வயதிலிருந்தே குழந்தைகள் என்றால் பிடிக்கும். எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் தூக்கிக் கொஞ்சி விளையாட ஆரம்பித்து விடுவான். எனக்குக் குழந்தைகளுடன் விளையாடுவதில் எப்போதுமே ஒரு தயக்கம் இருந்து வந்தது. என்னிடம் வலிய வந்து பழகும் குழந்தைகளுடன் மட்டும் விளையாடுவேன். மற்ற குழந்தைகளிடம் இருந்து கொஞ்சம் தொலைவிலேயே தான் இருப்பேன். என் மகன் அருண் விஷயத்தில் நான் அப்படி இல்லை. (என் மகன் அல்லவா?) பிறந்து சில நாள்களிலேயே அவனை நானாகவே தூக்கி வைத்துக் கொள்ளத் தொடங்கினேன். அருண் ஒரு மாதக் குழந்தையாய் இருந்த போது சில நாள்களுக்கு முன் ஒரு நண்பர் தனது ஒரு வயதுக் குழந்தையுடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அந்தக் குழந்தையை இதற்கு முன் பார்க்கும் போதெல்லாம் நான் சிரிப்பது, தொடாமல் அவளுக்கு விளையாட்டுக் காட்டுவது என்பதோடு நிறுத்திக் கொள்வேன். ஆனால் இப்போது என்னையறியாமல் அவளைத் தூக்கி விளையாடத் தொடங்கி விட்டேன். நண்பர் வீட்டை விட்டுப் போன பிறகு தான் என் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாறுபாட்டை நான் உணர்ந்தேன். ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரைப் பலவிதங்களில் மேம்படுத்த...