இடுகைகள்

ஜனவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்

இரண்டு வாரங்களுக்கு முன் சிட்னியில் டார்லிங் ஹார்பரில் வெட்டியாய் உட்கார்ந்திருந்தேன்.  சுற்றுலாப் பயணிகள் நிறைந்த அந்த இடத்தில் வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது ஒரு விதமான அனுபவம்.  அப்போது ஒரு பறவை எங்கிருந்தோ பறந்து வந்து எனக்கு அருகில், கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் தூரத்தில் அமர்ந்தது.  ஆள் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாய் இருந்த அந்த இடத்தில் அது ஓய்வெடுக்கத் தொடங்கி விட்டது.  அவ்வப்போது யாரேனும் அருகில் வந்தால் மட்டும் விலகி நகர்ந்து கொண்டது. அப்படி நகரும்போது தான் கவனித்தேன் அந்தப் பறவையின் கால்கள் பெரிதாக சேதமடைந்திருப்பதை.  நடப்பதே கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் நடந்தது.  ஒரு ஊனமுற்ற பறவையை நான் பார்ப்பது இது முதல் தடவையல்ல .  ஒவ்வொரு முறையும் என் மனதில் தோன்றுவது இது தான்.  அந்த ஊனத்தை "ஐந்தறிவு" ஜீவிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.  ஊனமேதும் இல்லாத மற்ற பறவைகளின் அதே வாழ்க்கையைத் தான் ஊனமுற்ற இந்தப் பறவைகளும் வாழ்கின்றன.  ஆனால் ஊனமுற்ற மனிதன் என்றால் மட்டும் நாம் எத்தனையோ விதமான வேறுபாடு காட்டுகிறோம்.  நாம் காட்டும் வேறுபாட்டால் பலர் தங்களைத் தாங்களே இரண்டாம