கால்தானே
தன்னையறியாமல் வந்த விசும்பலை மீண்டும் அடக்கினேன். கண்ணீர் வந்துவிடவில்லை. நல்லவேளை, யாரும் கவனிக்கவுமில்லை. பயந்தா போயிருக்கிறேன்? தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் "கால்தானே போய்விட்டது. அதனாலென்ன?"