திருக்குறளை மற்ற சில இலக்கியங்கள் போல அல்லாமல் தியான மந்திரங்கள் போலப் படிக்க வேண்டும். ஒரு குறளைப் படித்து அதன் அர்த்தம் புரிந்ததும் நிறுத்திவிடாமல், அதை மனதுக்குள் வைத்து அசை போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குறளின் முழுமையான பயனை நாம் அடைய முடியும் என்று ஜெயமோகன் எங்கோ சொன்னதாக ஞாபகம். சில திருக்குறள்கள் அப்படித்தான். படித்து, பொருள் விளங்கியதும் அவை அடிக்கடி நம் நினைவுக்கு வந்துபோய்க்கொண்டே இருக்கும். திருக்குறள் தான் என்றில்லை... சினிமாப் பாடல்களோ, சில கவிதை அல்லது நாவல் வரிகளோ, பேசும்போது சிலர் சொன்னதோ[1] கூட அவ்வாறு வந்து போகும். அவற்றை மனதில் அசைபோடும் தோறும் நம்முள் அவை மாற்றத்தை உருவாக்கும். சமீப காலத்தில் மிகப்பெரிய ஒரு மாறுதலை எனக்களித்த ஒரு வரி பாரதியுடையது. மிகவும் எளிமையான வரி. ‘ அச்சம் தவிர் .’ ரொம்ப எளிதாகத் தோன்றும் இந்த அறிவுரையைச் செயல்படுத்துகையில்தான்[2] அதன் வீச்சு எனக்கு விளங்கத் தொடங்கியது. பயம் என்பது ரொம்பவும் அடிப்படையானது. கிட்டத்தட்ட நம் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு எண்ணத்திலும் பயம் இருக்கிறது. எல்லா இடத்திலும் இருக்கும் ஒன்ற
வலி என்கின்ற உணர்வினால் சங்கமித்திருக்கின்றோம் நாம் :)
பதிலளிநீக்குhi, chance a illai. Realy superb.
பதிலளிநீக்குwhat a words.very nice.
பதிலளிநீக்குநெஞ்சம் நெகிழ்ந்தேன்....
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அனைவருக்கும்.
பதிலளிநீக்குகால் ரொம்ப வலிச்சுதா டா. சூப்பர் வோர்ட்ஸ் பா.
பதிலளிநீக்குவலி ஒரு பெரிய விஷம் இல்லை, உண்மையில் பார்க்கப்போனால். நடக்க முடியாமல், உட்காரக்கூட முடியாமல் திடீரென ஒருநாள் ஆகிவிடுவது வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்தேயிராதது. ஒரு உறுதியின்மை, நமக்கு என்ன நடக்கிறதென்று தெரியாத நிலை, இதுதான் நம் உறுதியை உடைத்து விடும். வலி என்பது அதன்முன் சாதாரணம்.
நீக்குஇதே வலி இதற்க்கு முன் ஒருமுறை நடந்திருந்தால் இந்த வலி கூட சீக்கிரம் சரி ஆகிவிடும் என்ற நம்பிகையும் வரும் .சரியா ... எதிர் பார்காத ஒன்று, இதற்க்கு முன் இப்படி நடக்காத ஒரு சம்பவம் நடந்தால் அப்படி தான் தோனும்.....
பதிலளிநீக்கு