கால்தானே

தன்னையறியாமல் வந்த விசும்பலை
மீண்டும் அடக்கினேன்.
கண்ணீர் வந்துவிடவில்லை.
நல்லவேளை, யாரும் கவனிக்கவுமில்லை.
பயந்தா போயிருக்கிறேன்?
தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்
"கால்தானே போய்விட்டது. அதனாலென்ன?"

கருத்துகள்

  1. வலி என்கின்ற உணர்வினால் சங்கமித்திருக்கின்றோம் நாம் :)

    பதிலளிநீக்கு
  2. hi, chance a illai. Realy superb.

    பதிலளிநீக்கு
  3. நெஞ்சம் நெகிழ்ந்தேன்....

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. கால் ரொம்ப வலிச்சுதா டா. சூப்பர் வோர்ட்ஸ் பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலி ஒரு பெரிய விஷம் இல்லை, உண்மையில் பார்க்கப்போனால். நடக்க முடியாமல், உட்காரக்கூட முடியாமல் திடீரென ஒருநாள் ஆகிவிடுவது வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்தேயிராதது. ஒரு உறுதியின்மை, நமக்கு என்ன நடக்கிறதென்று தெரியாத நிலை, இதுதான் நம் உறுதியை உடைத்து விடும். வலி என்பது அதன்முன் சாதாரணம்.

      நீக்கு
  6. இதே வலி இதற்க்கு முன் ஒருமுறை நடந்திருந்தால் இந்த வலி கூட சீக்கிரம் சரி ஆகிவிடும் என்ற நம்பிகையும் வரும் .சரியா ... எதிர் பார்காத ஒன்று, இதற்க்கு முன் இப்படி நடக்காத ஒரு சம்பவம் நடந்தால் அப்படி தான் தோனும்.....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

அதீத ஒத்திகை (overrehearsal)