மனம்

காய்ந்த எலும்பைக் கடிக்கும் நாய்
ஒருகணமும் அவ்வெலும்பை விட்டகலாமல்
தன் உயிர்போல் காப்பதைப் பார்த்திருக்கிறாயா?

எலும்பைத் தின்ன முடியாதென்பது
அந்த நாய் அறியாததா என்ன!

அத்தனை நாடகமும் அடுத்தொரு
கறித்துண்டு கிடைக்கும் வரை தான்.

கருத்துகள்

  1. நன்றி :)

    சுந்தரராமசாமி சொன்னது நினைவுக்கு வருகிறது: "எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்." எழுத எழுத இன்னும் எழுதப் பொருள் கிடைக்கிறது. மனதில் உள்ளதையெல்லாம் என்றேனும் எழுதித் தீர்த்து விட்டால் நன்றாய்த்தான் இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  2. :) மனுஷன் இப்படி இருந்தா பச்சோந்தி - துரோகி ன்னு சொல்றாங்க :)

    நாய் ன்னு சொன்னோடனே என்னக்கு ஒன்னு தோணுச்சு...
    "என் மனைவி போட்ட சப்பாத்திய சாப்பிடாம போன நாயோட தைரியத்த(!) என்னன்னு சொல்ல?"

    பதிலளிநீக்கு
  3. அமர், உண்மையை சொல்லணும்னா நான் எழுதி இருக்கிறது என்னைப் பத்தி தான்.

    நாய்ங்க பொதுவாவே சில விஷயங்கள்-ல தைரியமாவை தான் ;)

    பதிலளிநீக்கு
  4. புதிய கறித்துண்டை விரும்பாமல் பழைய எலும்புடனேயே வாழ்க்கை நடத்தும் நாய்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. @சரவணன்: இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை! :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்