கடந்த சில மாதங்களாக என் வாயின் இரண்டு பக்கங்களிலும் காயமாகி இருந்தது. சிட்னியில் வீட்டில் இருக்கும்தோறும் காயம் மட்டுப்படாமலே இருந்தது. மருந்து போட்டால் கொஞ்சம் குறையும், ஆனால் ஓரிரு நாள்களிலேயே மீண்டும் வந்துவிடும். பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் காயம் சிலநாள்களிலேயே ஆறியது; சிட்னி திரும்பி வந்ததும் சிலநாள்களிலேயே காயம் பழையபடி திரும்பி வந்தது. காயத்தைச் சுற்றிலும் எப்போதும் தோல் வறண்டிருக்கும். முதலில் நான் நினைத்தது என்னவென்றால் சிட்னியின் பருவநிலை காரணமாக என் தோல் வறண்டு போகிறது. மிகுந்த வறட்சியால் தோல் வெடித்துக் காயம் உண்டாகிறது. பயணம் செய்த இடங்களின் (கோவில்பட்டி, சான் ஃபிரான்சிஸ்கோ, பாஸ்டன்) பருவநிலையை — முக்கியமாக காற்றிலுள்ள ஈரப்பதத்தை (humidity) — சிட்னியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய மாறுதல் ஒன்றும் தெரியவில்லை. அதனால் நான் நினைத்தது சரியான காரணம் இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் வேறு எந்த வகையிலும் சிட்னியில் இருக்கும்போது மட்டும் வரும் காயங்களை விளக்க முடியவில்லை. சென்ற வாரம் தற்செயலாக எனக்குத் தோன்றியது. ஒருவேளை நான் உபயோகிக்கும் சோப் எனது காயங்களுக்குக
:)
பதிலளிநீக்குநன்றி :)
பதிலளிநீக்குசுந்தரராமசாமி சொன்னது நினைவுக்கு வருகிறது: "எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்." எழுத எழுத இன்னும் எழுதப் பொருள் கிடைக்கிறது. மனதில் உள்ளதையெல்லாம் என்றேனும் எழுதித் தீர்த்து விட்டால் நன்றாய்த்தான் இருக்கும் :)
:) மனுஷன் இப்படி இருந்தா பச்சோந்தி - துரோகி ன்னு சொல்றாங்க :)
பதிலளிநீக்குநாய் ன்னு சொன்னோடனே என்னக்கு ஒன்னு தோணுச்சு...
"என் மனைவி போட்ட சப்பாத்திய சாப்பிடாம போன நாயோட தைரியத்த(!) என்னன்னு சொல்ல?"
அமர், உண்மையை சொல்லணும்னா நான் எழுதி இருக்கிறது என்னைப் பத்தி தான்.
பதிலளிநீக்குநாய்ங்க பொதுவாவே சில விஷயங்கள்-ல தைரியமாவை தான் ;)
புதிய கறித்துண்டை விரும்பாமல் பழைய எலும்புடனேயே வாழ்க்கை நடத்தும் நாய்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு@சரவணன்: இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை! :)
பதிலளிநீக்கு