அறிவிப்பு: நான் ரசித்த மற்றவர்களின் படைப்பு -- பெரும்பாலும் ஓரிரு வரிகளை மட்டும் -- பதிப்பிப்பதற்காக மறு ஒலிபரப்பு என்னும் புதிய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.
சில நேரங்களில் நான் சுய சித்திரவதை செய்துகொள்வதுண்டு. இப்போதும் அப்படித்தான், சீமானின் வாழ்த்துகள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பி படத்தை அந்தப் படம் வந்த புதிதிலேயே பார்த்திருந்தேன். வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையிலேயே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டில் மிக அதிகமாகச் செலவு செய்யப்பட்டது பேப்பருக்கும் மை-க்கும் தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்குப் படம் முழுவதும் வசனம் வசனம் வசனம் தான். அதிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு செயற்கையான வசனங்கள். "தம்பி தான் எனக்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்பினான்" என்று ஒரு விருந்தினர் சொல்வதாக வரும் காட்சி ஒன்றே போதும். படத்துல தமிழ் மட்டும் தான் பேசுவாங்களாம். மாதவனுடைய பல்ஸர் பைக்கில் ஸ்டிக்கரைக் கிழித்து தமிழில் பெயர் எழுதுமளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலிக்கவில்லையே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் நெருடலாகத் தோன்றிய விஷயம் வேறொன்று. பாவனாவின் குடும்பம் ஒரு லட்சியக் குடும்பம் என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு காட்டப் படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இட...
வழக்கமாகத் தண்ணீர் குடிக்கும் ஏரிக்கு வந்தது அந்த யானை. அங்கு ஏரி முழுவதுமாக உறைந்து குடிக்க முடியாமல் போயிருந்தது. கடந்த சில வாரங்களாகவே அளவுக்கு மீறிக் குளிர்ந்திருந்த ஏரி இப்போது இல்லாமலே போனது யானைக்கு ஏமாற்றமாக இருந்தது. தாகத்துடனேயே திரும்பிச் சென்றுவிட்டது. சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே ஏரிக்கு யானை வந்தது. அப்போதும் உறைந்தே இருந்த ஏரியிடம் யானை கேட்டது, “எல்லோருடைய தாகத்தையும் தீர்க்கும் புனிதமான பணி செய்யும் நீ இப்படி மாதக்கணக்கில் உறைந்து போகலாமா, இது நியாயம்தானா?” என்று. ஏரி சொன்னது, “நியாயமா என்று என்னைக் கேட்கிறாயா நீ? எத்தனையோ வருடங்கள் நான் நீராக இருந்து உன்போன்ற விலங்குகளின் தாகம் தீர்த்தேன். என்னுள் மீன்களும் பாம்புகளும் தவளைகளும் தாவரங்களுமாக எத்தனையோ உயிரினங்கள் வாழ வகை செய்து கொடுத்தேன். இந்தப் பாழாய்ப்போன காற்றுக்கு என்ன கோபமோ, என்னால் தாங்கமுடியாத அளவு குளிராக வீசி இப்படி என்னை உறைய வைத்துவிட்டது. என் மேல்மட்டத்தில் பல அடி கனத்துக்கு நான் உறைந்ததால் உன்போன்ற விலங்குகளுக்கு உதவ முடியாமல் போனாலும், ஆழத்தில் நான...
தற்செயலாக பாகவதரின் இந்தப் பாடலைக் கேட்க நேரிட்டது. மனம் கனக்கும் வேளைகளில் எப்போதுமே கவிதையின் மடியில் சரணடைவது என் வழக்கம். YouTube-ல் கண்ணதாசன் பாடல்களைத் தேடும்போது தற்செயலாக இந்தப் பாடலைக் கண்டுபிடித்தேன். பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல் காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப - வீண் காலமும் செல்ல மடிந்திடவோ முதல் முறை கேட்கையில் ரொம்பவே அற்புதமாகத் தோன்றியது. திரும்ப ஒருமுறை கேட்கும்போது தான் ஒரு அடிப்படைத் தவறு புரிந்தது. காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப விலங்குகள் அலைவதில்லை. விலங்குகள் பயத்தாலோ அல்லது பசியாலோ மட்டுமே மற்றவைகளைத் தாக்கும். விலங்குகள் நீலப்படம் பார்ப்பதோ வற்புறுத்தி உடலுறவு கொள்வதோ கிடையாது. காமத்திலும் வன்முறையிலும் விலங்குகள் போல் நாம் நேர்மையாய் இருந்தால் உலகில் இத்தனை பிரச்சனைகள் இருக்காது! (என்னாதுங்க? கவிதை சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாதா. சரியாச் சொன்னீங்க :)
கருத்துகள்
கருத்துரையிடுக