வாழ்க்கை? -- எதிர்வினை

நண்பர் அமரின்  வாழ்க்கை? என்ற பதிவிற்கு பின்னூட்டம் எழுத ஆரம்பித்து பெரியதாக வந்ததால் இங்கே பதிப்பிக்கிறேன்.  அந்தப் பதிவையும் ஏற்கெனவே இருக்கும் பின்னூட்டங்களையும் (comments) முதலில் படித்து விடுங்கள். (http://vettiyaa-pesu.blogspot.com/2008/07/blog-post_14.html)

"கடவுளுக்கு வரையறை கிடையாது. க்ச்டுர்ச்து க்கு எப்படி எந்த ஒரு வரையரயும் இல்லையோ, இருக்க முடியாதோ அதுபோல்."

க்ச்டுர்ச்துவைப் பற்றி அதனால்தான் யாரும் பேசவில்லை.  எதைப்பற்றியெல்லாம் நம் மனம் நினைக்கிறதோ, அதற்கெல்லாம் ஒரு வரையறை இல்லாமல் இருக்க முடியாது.  வரையறையே இல்லாத ஒன்று வேண்டும் என்று தேடித்தான் க்ச்டுர்ச்துவை நீங்கள் கண்டடைந்திருப்பீர்கள்.  உங்களளவில், இதை எழுதும்போது, "க்ச்டுர்ச்து என்பது வரையறை இல்லாதது" என்ற வரையறை இருந்திருக்கும்.  கடவுளைக்கூட "வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன்" என்ற வரையறையோடுதான் மனிதமனத்தால் நெருங்க முடியும்.  பிரபஞ்சம் எல்லையற்றது என்று வரையறுப்பதைப் போல.

இங்கே வரையறை என்பது அறிவியலில் உள்ளதுபோல முழுமையான (complete) ஒன்றாக இருக்கத் தேவையில்லை.  ஒவ்வொரு மனமும் அதன் தேவைகளுக்கும் திறனுக்கும் ஏற்ப மேலோட்டமான அல்லது மிகவும் தெளிவான வரையறைகளை எல்லாவற்றுக்கும் அளிக்கிறது.  இந்த வரையறைகளை ஒரே மனம் (மனிதன்) கணந்தோறும் மாற்றிக்கொண்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.

"Could you please give a sample?"

அந்தப் புத்தகத்தில் நான் படித்ததையே சொல்கிறேன்.  நீங்கள் சின்ன வயதில் டாக்டராக ஆசைப்படுகிறீர்கள்.  முடியாமல் போகிறது.  நீங்கள் ஒரு வெற்றிகரமான இன்ஜினியராகிறீர்கள்.  பல வருடங்களுக்குப் பின் இதை நினைத்துப் பார்க்கிறீர்கள்.  ஒரு டாக்டராக ஆகியிருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று கடவுளுக்கு நன்றி செலுத்துகிறீர்கள்.  தவறான ஆசையில் நீங்கள் இருந்த நேரத்தில் உங்களுக்குச் சரியான ஒன்றை அளித்தவர் கடவுள்.

இந்த வரையறை நடராஜ குருவினுடையது.  இதை நீங்கள் ஏற்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.  நான் சொல்ல வந்தது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் கடவுள் என்று ஒன்றை வரையறுக்கிறான்.  ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்லும்போது அவன் வரையறையில் எது கடவுளோ அது இல்லை என்று அவன் நம்புகிறான்.

"கடவுள் என்று நீங்கள்/குரு வரையறுப்பதும் இல்லை."

கடவுள் என்பதை "இல்லை" என்று உங்கள் மனம் வரையறுக்கிறது போலும்.  தவிரவும் மற்றவர்களது கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.  திருச்செந்தூர் கோயிலிலுள்ள முருகன் சிலைதான் கடவுள் என்று நம்பும் ஒருவனின் கடவுள் இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால்?  அந்த சிலைதான் இத்தனை வருடங்களாக நம் கண் முன்னேயே இருக்கிறதே.  சிலை இருக்கிறது, ஆனால் கடவுள் இல்லை என்று சொல்வீர்களேயானால் நீங்கள் "சிலையே கடவுள்" என்ற அந்த மனிதனுடைய வரையறையை ஏற்காமல் நீங்கள் வரையறுக்கும் கடவுளைப் பற்றித்தான் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

கருத்துகள்

  1. மன்னிக்கவும் கடவுளைப்பற்றி இப்படி ஒரு கட்டுரை வரும் என்று தெரிந்து இருந்தால், நான் வாழ்க்கை பற்றி எழுதி இருக்கவே மாட்டேன்.

    /*தவறான ஆசையில் நீங்கள் இருந்த நேரத்தில் உங்களுக்குச் சரியான ஒன்றை அளித்தவர் கடவுள்*/

    மன்னிக்கவும், மேற்கூறிய இந்த எடுத்துக்காட்டையும் என்னால் ஏற்க முடியவில்லை. தற்குறிப்பேற்றல் அணி மாதிரி இருக்கும் ஓர் விஷயத்தை எப்படி கடவுள் கொடுத்தார் என்று எப்படி நம்ப முடியும்?

    /*தவிரவும் மற்றவர்களது கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது*/
    என்னுடைய நோக்கம் அதுவல்ல. என்னுடைய கட்டுரை, என்னுடைய பதில்கள். யாரையும் பின்பற்ற சொல்ல வில்லை.

    /*...சிலை இருக்கிறது, ஆனால் கடவுள் இல்லை என்று சொல்வீர்களேயானால் ...*/
    இது என் வேலை கிடையாது. ஆனால் அது தான் உண்மை ;)

    /*அந்த மனிதனுடைய வரையறையை ஏற்காமல் நீங்கள் வரையறுக்கும் கடவுளைப் பற்றித்தான் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்*/
    அவ்வாறு பேசி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

    God = Not Exists.
    God = Exists in Temple.
    God = Exists in ....

    என்னை பொறுத்த வரை கடவுள் கிடையாது. ஒரு வேலை நான்
    சின்ன வயதில் டாக்டராக ஆசைப்படுகிறேன். முடியாமல் போகிறது. நான் ஒரு வெற்றிகரமான இன்ஜினியரானால்,

    டாக்டராக இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று நினைத்திருப்பேன்.

    எங்கே கடவுளுக்கு என்ன வேலை? நீங்கள் ஏன் என்னுடைய வரையறையை மாற்ற முயற்சி செய்கிறீர்கள்?

    பூஜ்ஜியத்திற்கு மதிப்பு கிடையாது, அப்படியே மதிப்பு கொடுக்க வேண்டும் என்றால் 0 என்று தான் என்னால் கூற முடியும்.

    பதிலளிநீக்கு
  2. "தற்குறிப்பேற்றல் அணி மாதிரி இருக்கும் ஓர் விஷயத்தை எப்படி கடவுள் கொடுத்தார் என்று எப்படி நம்ப முடியும்?"

    இது நடராஜகுரு சொன்ன வரையறையை விளக்க அவர் சொன்ன எடுத்துக்காட்டு. இதற்கு நான் வக்காலத்து வாங்க முடியாது :)

    "நீங்கள் ஏன் என்னுடைய வரையறையை மாற்ற முயற்சி செய்கிறீர்கள்?"

    வெளிப்படையாகச் சொல்லப்படும் கருத்தை விவாதத்துக்குட்படுத்தலாம் என்பதால்தான்! உங்கள் வரையறையை மாற்றவோ என் கருத்தைத் திணிக்கவோ அல்ல, விவாதத்தின் பொருட்டே இவ்வளவும்.

    பதிலளிநீக்கு
  3. இந்தியா போல கலாச்சார காவலர்கள் அதிகம் உள்ள நாட்டில் :) மனிதனின் தலையாய பகுத்தறிவு வாதம் கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க முடியும். (நம் கலாச்சாரம் அப்படி).

    நையாண்டியை புறம் தள்ளி வைத்தால்... "I am that" என்னும் புத்தகத்தில் "Nisargadatta Maharaj" குறிப்பிடுகிறார்..

    The seeker is he who is in search of himself.

    Give up all questions except one: ‘Who am I?’ After all, the only fact you are sure of is that you are. The ‘I am’ is certain. The ‘I am this’ is not. Struggle to find out what you are in reality.

    To know what you are, you must first investigate and know what you are not.

    Discover all that you are not -- body, feelings thoughts, time, space, this or that -- nothing, concrete or abstract, which you perceive can be you. The very act of perceiving shows that you are not what you perceive.

    The clearer you understand on the level of mind you can be described in negative terms only, the quicker will you come to the end of your search and realise that you are the limitless being.

    இது போலத்தான் எப்படி நான் என்னையே வரையறுக்க முடியாதோ... அப்பொழுது நான் மற்றவற்றை கண்டிப்பாக வரையறுக்க முடியாது... ஏனெனில் நான் சொல்லும் நான் நானில்லை... இது "தற்குறிப்பேற்றல் அணி" மாதிரி இருந்தால் அது நான் சொன்னதல்ல நீங்கள் எண்ணிக்கொண்டது... நீங்கள் இன்று "தற்குறிப்பேற்றல் அணி" எனலாம் நாளை "இல்பொருள் உவமை அணி" எனலாம்.. நாளை மறுநாள் அதை "யாப்பு" எனலாம்... ஆனால் எதை எழுத நினைக்கிறோமோ அதை நம்மால் எழுத மட்டும் தான் முடியும் அது உண்மையில் அதுவல்ல.

    அறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செல்ல இடமின்றி முட்டி நிற்கும் தருணங்கள் நிறைய உண்டு. "உலகம் எப்படி உருவாயிற்று?" என்ற கேள்வி முதல் "அணு என்பது எது?" வரை அடங்கும்.... அந்த கேள்விகள் எல்லாவற்றையும் நாம் உருவகப்படுத்தலாமே தவிர அதன் மூலம் நம் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டது..

    There are some processes going on in day to day life... we currently perceive that as a state without knowing that it is a process... explaining an experience is bounded to words\speech... experiencing is the actual act.... it is a process and it is boundless...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

அதீத ஒத்திகை (overrehearsal)