இடுகைகள்

மதிப்பீடு

சிலையாக மாறிப்போவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் சிலையாக நிற்கும் மனிதன் சிலைப்படுத்தப்பட்டிருக்கும் பண்புகளிலிருந்து ஒருகாலத்தில் மாறுபட்டிருந்தான் என்பதையோ, இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் மாறியிருக்கக்கூடும் என்பதையோ சொல்ல முடியாமல் போவதுதான்.  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர்களை வைத்தே மீதிப் பதினோரு ஆண்டுகளிலும் மதிப்பிடப்படும் குறிஞ்சிச்செடி போல மனிதர்களும் பெரும்பாலும் தவறாகவே மதிப்பிடப்படுகிறார்கள்.

பாண்டவர் பூமி

நான் பத்தாவது படித்துக்கொண்டிருக்கும்போது பாண்டவர் பூமி படம் வந்தது.  கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்.  என் அண்ணனுடைய நண்பர் ஒருவர் “அந்தப் படமெல்லாம் பார்ப்பியா நீ?” என்று நக்கலாகக் கேட்டது இன்னும் நினைவிலிருக்கிறது. படம் முடிந்தபின் “அப்படியொன்றும் மோசமான படம் இல்லை” என்றுதான் தோன்றியது.  ஆனால் கொஞ்சம் நாள் ஆக ஆக அதிலிருந்த ஒரு விஷயம் மட்டும் மனதில் ஆழமாக நின்றுவிட்டது.  “ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்களுக்கு தனிப்பட்ட நியாய தர்மங்கள் இருக்கும்.  பொதுவான நியாய தர்மங்களை ஒரு குடும்பத்துக்குள் கொண்டுவரக்கூடாது.  வெளிநபர்களால் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் முடியாது” என்பதுதான் அது.  அந்தப்படத்தில் இப்போது நினைவிலிருப்பதும் அநேகமாக இந்த ஒரு விஷயம்தான். ஒரு ஆர்வத்தில் YouTube-ல் தேடிப்பிடித்து பாண்டவர் பூமியைப் பார்க்க ஆரம்பித்தேன்.  முதல் பத்து நிமிடம் தாண்டுவதற்குள்ளேயே இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.  முன்பெல்லாம் கிட்டத்தட்ட சேரனின் எல்லாப் படங்களுமே பிடி...

பின்தொடரும் நிழலின் குரல்

எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன்.  ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம்.  புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில வேலைகளைக் குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.  (மூன்று தொழில்நுட்ப செய்தி வலைதளங்களுக்குப் பதிலாக இப்போது படிப்பது ஒன்றை மட்டும்.  Twitter, Facebook ஆகியவற்றில் கணக்குகளை மூடியாயிற்று.  Google+-லும் ஏகப்பட்ட பேரைப் பின்பற்றாமல் கொஞ்சம் நிதானத்துடன் இருப்பது.  இவை முக்கியமான மாற்றங்கள்.) நாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்: அதிகாரமும் மகத்துவமும் தனிமையை உண்டு பண்ணுகின்றன. மனைவியின் மடியிலோ மகள் மடியிலோதான் மனிதன் நிம்மதியாகச் சாகமுடியும். புரட்சியாளனுக்குத் தனிமை விதிக்கப்பட்டிருக்கிறது.  கருணையின்மை அவன்மீது பாயக் காத்திருக்கிறது.  இலட்சிய வேகத்தால் மறைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒவ்வொன்றும் அவனை அணுகி கணக்குத் தீர்க்கக் காத்திருக்கின்றன.  காலம் ஒரு தருணத்தில் அவனை உதிர்த்துவிட்டுத்தான் அடுத்த அடியைத் தூக்கி வைக...

சொல்லப்படாத சொற்கள்

காதல் என்று வருகையில் நான் ஒன்றும் பெரிய மேதையில்லை.  ஆனாலும் என்னிடமும் தங்கள் ஏற்கப்படாத காதல் குறித்து சிலர் அறிவுரை கேட்டிருக்கிறார்கள்.  (அல்லது ஒருவேளை நானாகத்தான் சொல்லியிருக்கிறேன், அவர்கள் கேட்காமலேயே!) என்னுடைய அறிவுரைகள் எளிமையானவை.  அதில் பிரதானமானது “நீ விரும்பும் அவளிடம் (அல்லது அவனிடம்) உன் மனதிலிருப்பதை நேரடியாக, வெளிப்படையாகச் சொல்லிவிடு” என்பது தான்.  எதையும் மிச்சம் வைக்காமல் மனதிலுள்ளவற்றைச் சொல்லிவிடுதல்.  அப்படிச் சொல்வதாலேயே நாம் விரும்பும் அந்த நபர் நம் அன்பை ஏற்றுக்கொண்டு விடுவதில்லை, ஆனால் சொல்லிவிடுவது நாம் இழந்துவிட்ட சமநிலையை நமக்கு மீண்டும் அளிக்கும்.  அந்த சமநிலையில் இருந்துகொண்டு நம் ஆசையைப் பார்ப்பதே மிகப் பெரிய மாற்றம். பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு சொற்றொடர்: “கூறப்படாத சொற்கள் முளைவிட்டு வளர்கின்றன”.  படித்தவுடன் தோன்றியது இதுதான்.  நாம் சொல்ல நினைத்து ஆனால் சொல்லாமல் போன சொற்கள் நம்முள்ளேயே ஊறித் திளைத்து வளர்கின்றன... நம்முள் இருக்கையில் அவை வாலி போல் நம் பலத்தில் பாதியை உறிஞ்சி விடுகின்றன.  ...

இரு பறவைகள்

“ இலக்கியம் நம்மைக் கலைத்துப் போட்டு விடுகிறது.  நம்மை நாமே திரும்பத் தொகுத்துக்கொள்ளும்போது நாம் கற்றுக் கொள்பவையே அந்த இலக்கியத்திலிருந்து நமக்குக் கிடைப்பவை ” என்று எங்கோ ஜெயமோகன் எழுதியதாய் ஞாபகம்.  இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒரே படைப்பு வேறுபட்ட காலகட்டங்களில் நம்மை வெவ்வேறு விதங்களில் கலைத்துப் போட்டுவிடக் கூடும்.  திரும்பி நம்மை நாமே தொகுத்துக் கொள்கையில் நாம் வேறுவேறான விஷயங்களைக் கண்டறியக் கூடும்.  எனவே தான் மறுவாசிப்பு என்பதை நான் முக்கியமாகக் கருதுகிறேன்.  என்னை மிகவும் பாதித்த நாவல்களை மீண்டும் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டுமென விரும்புவேன். ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை சில வருடங்களுக்கு முன் முதல் முதலாக வாசித்தேன்.  பல விதங்களில் அந்த நாவல் அப்போது பிடித்திருந்தது/என்னைப் பாதித்திருந்தது.  அவ்வப்போது அதன் சில பகுதிகள் மட்டும் நினைவில் வந்துபோகும்.  தூத்துக்குடி மாதா கோவிலுக்குத் தற்செயலாக மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்றிருந்தபோது இந்நாவலில் ஏசு கிறிஸ்து வரும் அத்தியாயம் நினைவுக்கு வந்து மன எழுச்சி தந்தது...

பட்டினத்தாரும் பஞ்சகால எறும்பும்

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே எதனைக் கொண்டு நாம் வந்தோம் எதனைக் கொண்டு போகின்றோம் ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே. இளையராஜா ராகம் போட்டுப் பாடும்போது கேட்க இதமாத் தான் இருக்கு.  சொல்ற வார்த்தைகள்ல அர்த்தம் இருக்குற மாதிரியும் படத்தான் செய்யுது.  “எனக்கு அதுதான் வேணும்”னு அடம்பிடிக்கிற மனசுமேலே லேசாக் கோபமும் வருது.  இருக்கிறதை வச்சுகிட்டு நிம்மதியா இருக்கப் பழகணும்னு நிஜமாவே மனசுக்குள்ள தோனுது. ஆனா ஒரு விஷயம் திடீர்னு நினைவுல வந்து நம்மையே பாத்து சிரிக்கவும்தான் செய்யுது.  அதுவேணும் இதுவேணும்னு ஆசைப்படுற மனசு ஓடுன்னும் இருக்கிறதைக் கொண்டு வாழத் தெரிஞ்ச மனசு பொன்னுன்னும் தானே நினைக்கிறோம்?  அப்போ என்கிட்ட இருக்கிற ஓட்டு மனசு எனக்கு வேண்டாம், அதைவிட ஒசத்தியான பொன் மனசைத் தேடிப் போகப் போறேன்னு மனசு சொல்லுது.  அதையும் ஆசையைத் துறக்கப் போற துறவி மாதிரி வேஷம் போட்டுகிட்டுச் சொல்லுது.  அந்த வேஷத்தை நம்புற நாமதான் நித்யானந்தா பாவின்னு கூச்சலும் போட்டுக்கிறோம்.  ஓட்டையும் பொன்னையும் ஒ...

மிச்சம்

தொண்டை வரை வந்தும்சொல்லாமல் போன வார்த்தைகள். பாதி எழுதியபின் அனுப்ப மனமில்லாமல் கிழித்தெறிந்த கடிதங்கள். கடையில் பார்த்து, பிடித்து, ஆனாலும் உனக்காக வாங்காத பரிசுகள். தினமும் வந்து போகும் நினைவுகளைத் தவிர்த்தால், உனக்கும் எனக்குமான உறவில் இவைதான் மிச்சம் இப்போது.