அம்மா

மூன்று வயதில் வண்ணத்துப்பூச்சிக்கே பயப்படுவேனாம்.
ஐந்து வயதில் பக்கத்து வீட்டு கிளிக்கு பயந்தது நினைவிருக்கிறது.
கரப்பான்பூச்சிக்கு பயந்து தெருவையே கூட்டியது எட்டு வயதில்.
பதிமூன்று வயதில் பேய்ப்படம் பார்த்து இரண்டு நாள் காய்ச்சல்.
இருபத்து மூன்றாம் வயதில் ஒருமுறை, நாய்க்கு பயந்து
இரண்டு தெரு சுற்றிச் சென்றிருக்கிறேன்.

"நாய் என்ன செய்யும் நீ பாட்டுக்கு நட" சொல்கிறேன் மகளிடம்.
நேற்றிரவு தான் வீட்டில் ஒரு எலியைக் கொன்றேன்.
எல்லாம் அமுதா பிறந்ததற்கப்புறம் தான்.

கருத்துகள்

  1. You can add and share your blog posting at www.newspaanai.com. You will get more exposure and audience. Matter of fact you can add their button to your blog.
    I find very good Tamil articles there.

    பதிலளிநீக்கு
  2. nice words. i like it very much.it's 100% same character to me.

    பதிலளிநீக்கு
  3. இது எல்லாவற்றுக்கும் நான் பயந்தது இல்லை . 2 வருடங்களுக்கு முன் நாங்கள் புதிதாய் குடிவந்த வீட்டில் நான் சுத்தம் செய்யும் போது ஒரு பல்லியை பார்த்தேன். அதுவரை அப்படி ஒரு பல்லியை நான் பார்த்ததே இல்லை.சாதாரண பல்லி அளவில் 3 மடங்கு பெரியது . அதுவும் கால் கட்ட விரல் முன் நான் எதிர் பார்க்காத நிமிடம் விழுந்ததால் அன்று அலறியவள் .நான் அலறியதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோரும் என்னமோ, ஏதோ என்று பயந்து போனார்கள். அம்மா தான் சொன்னாங்க, அவர்கள் , அம்மா வீட்டிலும் இப்படி பல்லிகள் எல்லாம் உண்டு, இதை பார்த்தா பயந்தாய் என்று சொல்லி சிரித்தார்கள். இன்றும் சின்ன பல்லியை பார்த்தாலும் கண்ணை மூடி கொள்வேன் . இல்லை என்றால் வேறு பக்கம் திரும்பி விடுவேன் .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்