இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிறை 'கூட'வா??

பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூடப் பேரழகு என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு இந்த இரண்டு வரிகளும் பல வருடங்களுக்கு முன் முதன்முதலில் கேட்டதிலிருந்து இன்று வரையிலும் கேட்கும்போதெல்லாம் உறுத்திக் கொண்டே இருக்கின்றன.  என்னத்தை நினைத்து வைரமுத்து இந்த வரிகளை எழுதினாரோ.  பிறையும் இருளும் எல்லா நேரத்திலுமே அழகுதானே.

யாமறிந்த மொழிகளிலே

படம்
பல தமிழர்கள் இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன் -- "தமிழ் என்பதே ஒரு அருமையான அனுபவம்".  சிறு வயதுகளில் அதற்கெல்லாம் நான் மதிப்பே கொடுத்ததில்லை.  என் ரத்தத்தின் ரத்தமே என்று மேடையில் முழங்கும் அரசியலுக்கும் "தமிழே அமுதே"வுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் அப்போது எனக்குத் தெரியவில்லை.  தமிழ் மட்டுமே தெரிந்திருந்த அந்தக் காலத்தில் ஒப்பு நோக்க வேறெந்த மொழியும் இல்லை என்பதும் ஒரு காரணம். இப்போது நிலைமை வேறு.  பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் சிந்திக்கிறேன்.  ஆங்கிலப் பாடல்கள் கூட புரியத் தொடங்கி விட்டது.  ஆங்கிலத்தில் வாசிப்பதும் எழுதுவதும் தமிழை விடப் பலமடங்கு அதிகம்.  இந்த நிலையில் என்னால் ஆங்கிலமும் தமிழும் எனக்கு அளிக்கும் அந்தரங்க அனுபவத்தைப் பற்றி ஓரளவு பேச முடியும். ஜெயமோகனின் புல்வெளி தேசம் புத்தகத்தை நேற்று படித்து முடித்து, நேற்றிரவே கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் நாவலை வாசிக்கத் தொடங்கி விட்டேன்.  தமிழ் வாசிக்கும் போது தோன்றும் அந்த எண்ணம் மீண்டும் இன்று காலையில் தோன்றியது: தமிழ் அந்தரங்கமாக என் மனதில் ஒரு இனிய பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.  அ

வேதம் புதிது

திடீர் திடீரென்று எனக்குத் தோன்றும், ஏற்கெனவே பார்த்த ஏதாவதொரு படத்தைத் திரும்பவும் பார்க்க வேண்டுமென்று.  பல வருடங்களுக்கு முன் பார்த்த படம் வேதம் புதிது .  இன்றைக்கு மீண்டும் பார்க்கத் தோன்றியது. முதல் தடவை இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் பாரதிராஜா மேல் எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது.  பிறகு இந்தப் படத்தை முழுவதுமாக மறந்து போய் விட்டேன்.  இன்று ஒவ்வொரு காட்சியையும் பார்க்கப் பார்க்க அதிலிருந்த நேர்த்தியும் அழகும் மீண்டும் ஒரு புதிய அனுபவமாயிருந்தது. வழக்கமான தமிழ்ப்படங்களைப்போல வளவளவென்றில்லாமல் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் சொல்லி வேகமாக நகர்ந்த வண்ணமிருக்கிறது படம்.  இயல்பான பாத்திரங்களின் இயல்பாகவும் 'நச்'சென்றும் இருக்கும் வசனங்களை ரொம்ப ரசித்தேன்.  முக்கியமாக வீட்டுக்குப் புதிதாக வந்திருக்கும் பிராமணப் பையனால் பாலுத்தேவரின் வீட்டில் ஏற்படும் மாற்றங்கள். - நீங்க கோழியெல்லாம் சாப்பிடுவேளா? - ஆங், ஆடு கோழி எல்லாத்தையும் திங்கிறது தான். - மாமி? - அவ மட்டும் என்ன வாயைப் பாத்துட்டா இருப்பா, அவளும் திங்கிறதுதான். - இதெல்லாம் பாவம் இல்லையா? - (தனக்குள்) சின்னப் பச

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஊஞ்சல்

இன்றைய வார்த்தை ஊஞ்சல் = swing இத்துடன் எனது 30 நாள் சவால் நிறைவு பெறுகிறது. மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: அறிக்கை

இன்றைய வார்த்தை அறிக்கை = manifesto மேலும் சில வார்த்தைகள்