tag:blogger.com,1999:blog-334574442024-03-07T10:32:17.998+05:30குசேலனின் வலைப்பதிவுMankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.comBlogger167125tag:blogger.com,1999:blog-33457444.post-70727065180019618362022-11-22T10:21:00.001+05:302022-11-22T10:21:32.507+05:30காலங்கடந்து நிற்கும் அறிவுரைகள்<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOxbwMYBdowCyovFsUmHr3oLI3NhwKGiYhHw9-3iLfiNqKXifodQ8hcZpzYD5pa3FJDfE-DBL4n5lrZSP4IHUaLlBmrVcivB1l9dnSh46FCRfGCaBK1JxYICE50b6TqLzjucoNAg/s1600/1669092687961808-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOxbwMYBdowCyovFsUmHr3oLI3NhwKGiYhHw9-3iLfiNqKXifodQ8hcZpzYD5pa3FJDfE-DBL4n5lrZSP4IHUaLlBmrVcivB1l9dnSh46FCRfGCaBK1JxYICE50b6TqLzjucoNAg/s1600/1669092687961808-0.png" width="400">
</a>
</div><br></div>படத்தில் காண்பது அலுவலகத்தில் எனது பணி மேஜை. நான் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளைக் கண்ணில் படும்படி எழுதி வைத்திருக்கிறேன்.<div><br></div><div>ஒரு துறவி போல 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் இவ்வளவு யதார்த்தமான அறிவுரை கொடுத்திருக்கிறார் என்றால் அவர் வாழ்க்கையை எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்!</div>Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-42531300969456953812022-05-09T20:19:00.002+05:302022-05-09T20:21:49.829+05:30குணாவின் அபிராமி<p>அபிராமி அந்தாதியில் ‘நாயகி நான்முகி’ எனத் தொடங்கும் பாடல் அம்மையைப் பல பெயர்களும் சொல்லி வணங்குகிறது. தொடர்ந்து இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் <a href="https://abiramianandhathi.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0/">அம்பிகையை நேரில் பார்க்கலாமாம்</a>.</p><p>குணா திரைப்படத்தில், நாயகன் குணா நாயகி அபிராமியைத் தேடி அலைகிறான். தற்செயலாக அபிராமியை ஒரு கோவிலில் பார்க்கிறான். காணத் தேடி அலைந்தவனுக்கு அபிராமியை நேரில் பார்க்கக் கிடைக்கும் போது ஒலிக்க வேண்டிய பாடல் ‘நாயகி நான்முகி’ தானே! அந்தப் பாடலுடன் ‘பார்த்த விழி பார்த்தபடி’ என்ற திரைப்பாடல் தொடங்குகிறது.</p><p>வரிசையில் பலருக்குப் பின் நிற்கும் குணா வரிசை நகர நகர அபிராமியை நெருங்கிச் செல்கிறான். முதல் முதலாக அபிராமிக்கு மிக அருகில் நின்று பார்த்து வியக்கிறான். மீண்டும் அபிராமி அந்தாதியில் இருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. ‘பனி மொழி வேதப் பரிபுரையே’ என்ற இந்தப் பாடல் <a href="https://abiramianandhathi.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-42-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA/">அம்மையின் அழகை வர்ணிக்கும் பாடல்</a>.</p><p>ரசித்து ரசித்து அவர்கள் குணா படத்தை எடுத்திருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை வருகிறது.</p><p><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/Io3BzFa3ffg" title="YouTube video player" width="560"></iframe></p>Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0பெங்களுரு, கர்நாடக, இந்தியா12.9715987 77.5945627-15.338635136178846 42.4383127 41.281832536178847 112.7508127tag:blogger.com,1999:blog-33457444.post-88130184956999759752020-05-03T19:34:00.000+05:302020-05-03T19:34:48.887+05:30அதீத ஒத்திகை (overrehearsal)இயற்கையிலே சிலருக்கு உணர்திறன் அதிகம். இவர்களை <a href="https://hsperson.com/">Highly Sensitive Persons</a> என்று அழைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் எனக்கு இது தெரிய வந்ததிலிருந்து இது பற்றிக் கற்று வருகிறேன். நானும் ஒரு அதியுணர் நபர் (highly sensitive person-கு எனக்குத் தெரிந்த தமிழ்; இதை விட நல்ல மொழிபெயர்ப்பு இருந்தால் சொல்லுங்கள்). இந்த அதியுணர் திறனால் எனக்கு வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றி ஆரம்பத்தில் கற்று வந்தேன். இப்போது அதியுணர் குழந்தைகளை (highly sensitive children) எப்படி வளர்ப்பது என்பதைக் கொஞ்சம் கொஞ்சம் கற்று வருகிறேன். <br />
<br />
<a href="https://www.goodreads.com/book/show/923949.The_Highly_Sensitive_Child">The Highly Sensitive Child</a> புத்தகத்தில் வந்த அறிவுரை இது. உங்களுடைய அதியுணர் குழந்தை புதிய சூழ்நிலைகளில் மற்ற குழந்தைகளைப் போல் செயல்பட முடியாமல் போகலாம். போதுமான திறமை இருந்த போதிலும், புதிய சூழலால் திணறிப்போகும் அதியுணர் குழந்தைகளுக்கு செயல்படும் ஆற்றல் குறைந்து போகிறது. புதிய சூழலின் ஆதிக்கத்தை நம்மால் குறைக்க முடியாது, ஆனால் செய்ய வேண்டிய செயலை நம் அதியுணர் குழந்தை கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய அளவுக்கு ஒத்திகை பார்த்தால் மற்ற குழந்தைகள் அளவுக்கு நம் குழந்தைகளும் செயல்பட முடியும் அல்லவா? “உங்கள் குழந்தை செய்ய வேண்டியதை மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்த்து – overrehearse செய்து – தயார் படுத்துங்கள்” என்பதே அந்த அறிவுரை.<br />
<br />
நேற்றிலிருந்து இது என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையிலும் இது தான் எனக்கு இப்போதைய பிரச்சனை. இத்தனை ஆண்டுகள் வேலையில் எனக்கிருந்த பொறுப்புகள் மாறி, அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னுடைய அணியில் உள்ள மற்றவர்களுடன் பேசுவது, அணிக்கான பொது முடிவுகள் எடுப்பது போன்றவையும் என்னுடைய புதிய பொறுப்புகளில் அடக்கம். இவற்றைச் செய்ய நான் திணறுகிறேன் என்பது என்னை நன்றாகத் தெரிந்தவர்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்காது. <br />
<br />
இந்த சிக்கலைத் தாண்டிப்போக என்ன வழி? என் மனதில் இருக்கும் திட்டம் இது தான்:<br />
<ul>
<li>என்னுடைய சிக்கல் இது என்று <b>ஏற்றுக் கொள்வது</b>. அணியில் அத்தனை பேருக்கும் தலைவனாக நடந்து கொள்வது, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது ஆகியவை எனக்கு அசௌகரியமாக உள்ளன என்பதை அங்கீகரிப்பது முதல் படி.</li>
<li>ஓரிரு நாள்கள் நான் இந்த சவால் பெரிதாகத் தோன்றாதவாறு செயல்பட்டிருக்கிறேன். அந்த நாள்களில் நான் வேலையைத் தொடங்கும் முன்பே அந்த நாளில் வரக்கூடிய நெருக்கடியான தருணங்களைப் பற்றி சிந்தித்து அவற்றுக்குத் தயாரானேன். உதாரணம்: வாராவாரம் நடக்கும் team meeting — அனைவரிடமும் அவர்களது வேலையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல். <b>முதலிலேயே யோசித்து அதற்கு மனதளவில் தயாராகும் போது</b> என்னால் ஓரளவு எளிதாக அவற்றைச் செய்ய முடிகிறது.</li>
<li>தினமும் இப்படி overrehearse செய்து தயார் செய்துகொள்ள அதிகப்படியான நேரம் தேவை என்பதை ஒத்துக்கொள்வது. இதில் நான் நேரம் செலவழிப்பதால் மற்ற வேலைகள் செய்ய எனக்கு நேரம் குறைவாகவே கிடைக்கும். வேலை குறைவாக செய்வதால் என் மேல் நானே <b>அதிருப்தி அடையக் கூடாது</b>.</li>
<li>சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். <b>கொஞ்ச நாளிலேயே இந்த வேலைகள் எனக்குப் பழகி விடும்</b>. என்னுடைய அதியுணர் மனமும் அமைதியுடனேயே இந்த வேலைகளைப் பார்க்கும். அப்போது நான் முன்பு அளவுக்கு தினமும் வேலை பார்க்கத் தொடங்கி விடுவேன். எனவே வேலைத்திறன் குறைவது தற்காலிகப் பிரச்சனை தான். </li>
</ul>
<div>
திட்டம் போடுவது எளிது; செயல்படுத்துவது கடினம். இந்தத் திட்டத்தை என்னால் செயல்படுத்த முடிகிறதா, செயல்படுத்தினாலும் நான் எதிர்பார்க்கும் பயன் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-59888539552236701042018-11-17T22:44:00.002+05:302018-11-17T22:47:09.073+05:30நந்தா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen="" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/6LqZmASngLA/0.jpg" frameborder="0" height="266" src="https://www.youtube.com/embed/6LqZmASngLA?feature=player_embedded" width="320"></iframe></div>
<br />
17 வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நந்தா படத்தைப் பார்த்தேன். முன்பு போலவே இப்போதும் பிடித்திருந்தது. <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D)">பாலா</a> எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று நான் நினைப்பது இந்தப் படத்தைத் தான்.<br />
<br />
நந்தா, சேது இரண்டு படங்கள் தவிர அவர் எடுத்த படங்களில் எதுவுமே என்னைக் கவரவில்லை என்பது வேறு விஷயம்.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-59802844537250619902018-11-06T10:35:00.001+05:302018-11-06T10:36:44.514+05:30சர்கார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன்.<br />
<br />
படம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது.<br />
<br />
முப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போல நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார்.<br />
<br />
இராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை.<br />
<br />
இந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப் போலவே மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இது. ஒரு பிரச்சாரப் படம் என்ற அளவில் இது நல்ல படம் என்று தான் தோன்றுகிறது.<br />
<br />
ஒரு திரைப்பட இயக்குநர் என்ற அளவில் முருகதாஸ் மேல், அதாவது அவர் எடுக்கும் படங்களின் மேல், எனக்கு பெரிய மரியாதை இல்லை. ஆனால் ஒரு குடிமகன் என்ற அளவில், நாட்டில் நல்ல மாற்றம் வர வேண்டும் என்று முயற்சி எடுக்கும் அந்த மனிதர் மேல் எனக்கு மரியாதை வருகிறது.<br />
<br />
இந்தப் படங்களால் மட்டும் முன்னேற்றம் வந்து விடுமா? வராமல் போகலாம். ஆனால் முன்னேற்றத்தைக் கொண்டுவர தன்னால் ஆனதைச் செய்யும் மனிதருக்கு என் வணக்கங்கள்.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-52561324626636390692018-09-28T05:01:00.000+05:302018-09-28T05:01:04.773+05:30இப்போது நான் சுக்குத் தண்ணி ரசிகன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காஃபி குடிக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே எனக்கு உண்டு. காஃபியின் மணமும் சுவையும் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. இப்போது சில மாதங்களாக எனக்கு ஜீரணக் கோளாறு இருப்பதால் காஃபியை நிறுத்திப் பார் என்று ஒரு நண்பர் அறிவுரை கூறினார். ஒரு வாரம் காஃபியே குடிக்கவில்லை. ஜீரணக் கோளாறு முற்றிலும் சரியாகவில்லை, ஆனால் இரவில்<br />
ஆழ்ந்த தூக்கம் வருகிறது. முன்பு காலை 7:30 மணிக்கு முன் எழுவதே கடினம்; ஆனால் இப்போது சுலபமாக 6:30 மணிக்கு விழித்து விடுகிறேன்.<br />
<br />
இருந்தாலும் காஃபி குடிப்பதை நிறுத்துவது கஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு தான் யோசித்து நம் ஊரில் கிடைக்கும் சுக்கு மல்லி காஃபியைக் குடித்தால் என்ன என்று யோசித்தேன். பெயர் தான் சுக்கு மல்லி “காஃபி”யே தவிர அதில் காஃபிப் பொடி சேர்ப்பதே கிடையாது. (அதனால் இப்போது அதை “சுக்குத் தண்ணி” என்று நான் அழைக்கிறேன்.)<br />
<br />
வீட்டிலேயே சுக்கு, மிளகு, மல்லி எல்லாம் வறுத்து அரைத்து ஒரு பாட்டிலில் அடைத்து அலுவலகத்திற்குக் கொண்டு போய் விட்டேன். மாலை நேரத்தில் அலுவலகத்தில் தேநீர் போடுவதற்காக வைத்திருக்கும் வெந்நீரில் சுக்குத் தண்ணி தயார் செய்து குடிக்கிறேன். இரண்டு நாளிலேயே அதன் சுவை மிகவும் பிடித்துப் போய் விட்டது. இனிமேல் தினமும் சுக்குத் தண்ணி குடித்து விட வேண்டியது தான். 😋<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjawbUHBWxis4ZaY1aWZ5EbvlZumlTEUVF3b8DfXQiL2ze175Kx5vWl9vU_ZpkfqRcOjZ15pxfewfjbbl1TloeXcplOxcH9QWRdzqi-QT3AnPOqoIiZUMe_xxsZqVdqLFF6zvK58Q/s1600/IMG_20180926_141016.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjawbUHBWxis4ZaY1aWZ5EbvlZumlTEUVF3b8DfXQiL2ze175Kx5vWl9vU_ZpkfqRcOjZ15pxfewfjbbl1TloeXcplOxcH9QWRdzqi-QT3AnPOqoIiZUMe_xxsZqVdqLFF6zvK58Q/s400/IMG_20180926_141016.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஒரு பாட்டிலில் சுக்கு மல்லிப் பொடி, அடுத்த பாட்டிலில் பனங்கற்கண்டு, அருகே குடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் சுக்குத் தண்ணி</td></tr>
</tbody></table>
<br /></div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-53041372600418624352017-05-04T06:23:00.001+05:302017-05-04T06:24:08.609+05:30ஆங்கில வார்த்தை: அகழி<blockquote>
அகழி = moat</blockquote>
<a href="http://kuselan.manki.in/search/label/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">மேலும் சில வார்த்தைகள்</a>Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-10396926634170346572016-07-08T11:48:00.000+05:302016-07-08T11:48:14.451+05:30குழந்தைகளும் நானும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் அண்ணன் சரவணனுக்கு சிறு வயதிலிருந்தே குழந்தைகள் என்றால் பிடிக்கும். எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் தூக்கிக் கொஞ்சி விளையாட ஆரம்பித்து விடுவான். எனக்குக் குழந்தைகளுடன் விளையாடுவதில் எப்போதுமே ஒரு தயக்கம் இருந்து வந்தது. என்னிடம் வலிய வந்து பழகும் குழந்தைகளுடன் மட்டும் விளையாடுவேன். மற்ற குழந்தைகளிடம் இருந்து கொஞ்சம் தொலைவிலேயே தான் இருப்பேன்.<br />
<br />
என் மகன் அருண் விஷயத்தில் நான் அப்படி இல்லை. (என் மகன் அல்லவா?) பிறந்து சில நாள்களிலேயே அவனை நானாகவே தூக்கி வைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqEEaNAsEzig08xBYNiRYn8NayCQiYstC7z-eBmtq_rtLkEibVHz8i3Y3G8_Kx4na85YxUhX4zAJ7JucWrj5IVNCy70H53ch9DQfafn0VuZ86Bkd9jz0hDry7eCXs6jullV5J4Ow/s1600/_dsc2782.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqEEaNAsEzig08xBYNiRYn8NayCQiYstC7z-eBmtq_rtLkEibVHz8i3Y3G8_Kx4na85YxUhX4zAJ7JucWrj5IVNCy70H53ch9DQfafn0VuZ86Bkd9jz0hDry7eCXs6jullV5J4Ow/s400/_dsc2782.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அருண் ஒரு மாதக் குழந்தையாய் இருந்த போது</td></tr>
</tbody></table>
சில நாள்களுக்கு முன் ஒரு நண்பர் தனது ஒரு வயதுக் குழந்தையுடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அந்தக் குழந்தையை இதற்கு முன் பார்க்கும் போதெல்லாம் நான் சிரிப்பது, தொடாமல் அவளுக்கு விளையாட்டுக் காட்டுவது என்பதோடு நிறுத்திக் கொள்வேன். ஆனால் இப்போது என்னையறியாமல் அவளைத் தூக்கி விளையாடத் தொடங்கி விட்டேன். நண்பர் வீட்டை விட்டுப் போன பிறகு தான் என் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாறுபாட்டை நான் உணர்ந்தேன்.<br />
<br />
ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரைப் பலவிதங்களில் மேம்படுத்துகிறது. பிறந்து சில மாதங்களிலேயே என் அருண் என்னை மேம்படுத்தத் தொடங்கி விட்டான்.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-76740450476202461122016-07-02T04:21:00.002+05:302016-07-02T04:21:41.910+05:30உழைப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMJhCcE3MZZDUN0kEMA6_b_4lTYo456XzhpHDLh7MQJ-T7A5h6cK99LN6_ysXSTySZ0hHWiiQWgzJKy8SSDpY0_fUxnH4YBVG5vSigrXBxVaNskDTjQJB3I0zrAE-ZUZ43fKq36Q/s1600/mango-009.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="264" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMJhCcE3MZZDUN0kEMA6_b_4lTYo456XzhpHDLh7MQJ-T7A5h6cK99LN6_ysXSTySZ0hHWiiQWgzJKy8SSDpY0_fUxnH4YBVG5vSigrXBxVaNskDTjQJB3I0zrAE-ZUZ43fKq36Q/s320/mango-009.jpg" width="320" /></a></div>
<br />
ஒரு மாம்பழம் உருவாக அந்த மரம் செலவிடும் உழைப்பு என்ன? ஒரு விதையாக இருந்து, செடியாக வாழந்தது முதல் வருடக் கணக்கில் உழைத்த உழைப்பு காய் காய்க்கத் தேவையான அடிப்படைகளை அந்த மரத்துக்குத் தருகிறது. முந்தைய பருவத்திலிருந்து (season) இந்தப் பருவம் வரையிலான அந்த மரத்தின் உழைப்பு அதில் இப்போது காய்த்திருக்கும் ஒவ்வொரு பழத்திற்கும் காரணம். மாம்பழத்தைக் கடித்துத் தின்னும் நாம் அந்த உழைப்பைப் பற்றி யோசிப்பதுண்டா?</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-21637237886778872952016-01-26T09:42:00.000+05:302016-01-26T09:42:45.781+05:30‘கற்பழிப்பு’ என்னும் அபத்தம்கற்பு என்றால் ஒழுக்கம். ஒழுக்கம் தவறுவது என்பது ஒருவரது சொந்தச் செயலாலேயே நிகழ முடியும். நான் பொய் சொன்னால் நான் ஒழுக்கம் கெட்டவன்; என்னிடம் ஒருவர் பொய் சொன்னால் பொய் சொன்னவரே ஒழுக்கம் கெட்டவர்; எனது ஒழுக்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.<br />
<br />
ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்தால் அதை ‘கற்பழிப்பு’ என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணைக் ‘கற்பிழந்தவள்’ என்றும் கூறுகிறோம். இந்த வார்த்தைப் பிரயோகம் நம்முடையது ஆணாதிக்க சமுதாயம் என்பதற்கு இன்னொரு சான்று. ஒரு ஆண் தவறு செய்த இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.<br />
<br />
நல்லதொரு தமிழகத்தை விரும்பும் அனைவரும் (முக்கியமாகப் பெண்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்) பெண்களைப் பழிக்கும் இந்த வார்த்தைகளை இனிமேல் உபயோகிக்கக் கூடாது என்பது என்னுடைய விருப்பம்.Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-43654381993437213702016-01-25T11:47:00.001+05:302016-01-25T11:47:11.409+05:30துன்பப்படுதல்அடிபட்ட குழந்தை அழுகிறது. வலி குறைந்ததும் விளையாட்டு மீண்டும் தொடர்கிறது. ஏமாற்றமடைந்த குழந்தை அழுகிறது. கொஞ்ச நேரத்திலே வேறு ஏதோ அதன் கவனத்தை ஈர்க்கிறது; குழந்தை அழுகையை மறக்கிறது. பயமடைந்த குழந்தை அழுகிறது. அன்னை வந்து பயம் போக்கியதும் அழுத குழந்தை சிரிக்கிறது.<br />
<br />
குழந்தையாய் இருக்கையில் மட்டுமல்ல. வளர்ந்த பிறகும்கூட அழும் நம் மனம் சீக்கிரமே அழுகையை நிறுத்தி வேறு எதையோ நினைக்க ஆரம்பிக்கிறது. நாம்தான் அதை அனுமதிப்பதில்லை. மீண்டும் மீண்டும் "எனக்கு இப்படி நடந்ததே" என்று வலுக்கட்டாயமாக யோசித்து அழுகையை வரவைத்துக் கொள்கிறோம்.<br />
<br />
துன்பம் நேர்ந்திருக்கும்போது நாம் கவலைப்படத்தான் வேண்டும் என்று நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் நிபந்தனைதானே இது?<br />
<br />
பார்க்க: <a href="http://kuselan.manki.in/2016/01/blog-post.html">தீதும் நன்றும்</a>Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-15061132380963028792016-01-17T02:40:00.001+05:302016-01-17T02:40:47.097+05:30தீதும் நன்றும்தமிழ் சினிமாவில் ரொம்ப நாளாகவே துன்பப்படுவது போற்றப்படுகிறது. நாயகர் (நாயகன், நாயகி, அவர்களது குடும்பம், நண்பர்கள் முதலியோர்) நல்லது மட்டுமே எப்போதும் செய்தாலும் அவர்களைத் துன்பம் வந்தடைவதுபோல் காட்சிகள் வைப்பது மட்டுமல்லாது நேரடியாகவே ‘துன்பப்படுவது உயரந்தது’ என்று சொல்வதும்கூட உண்டு.<br />
<blockquote>
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்<br />
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்<br />
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்<br />
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்<br />
உள்ளம் கேட்பேன்<br />
நன்மை செய்து துன்பம் வாங்கும்<br />
உள்ளம் கேட்பேன் (<a href="http://www.tamilpaa.com/2686-aattuviththaal-yaaroruvar-tamil-songs-lyrics">வரிகள்</a> • <a href="https://www.youtube.com/watch?v=FakpMn_x7T8&t=2m26s">பாடல்</a>)</blockquote>
<br />
இந்தப் பாடல் வரிகள் அதற்கு ஓர் உதாரணம். இந்தப் பாடலை நான் முதல் முதலில் கேட்டபோது எனக்கு இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயது இருந்திருக்கும். அதற்கு முன் துன்பப்படுவது பெருமை என்று ஒரு உள்ளுணர்வு மட்டும் இருந்த எனக்கு இதன்பின்னர் துன்பப்படுவது வெளிப்படையான விருப்பமாகவே ஆனது.<br />
<br />
ஒரு வேலையை இரண்டு வழிகளில் செய்யலாம் என்றால் அதில் கஷ்டமான வழியையே தேர்ந்தெடுப்பேன். கஷ்டமான வழியில் அந்த வேலையை முடித்தால் கஷ்டப்பட்டு சாதித்தோம் என்ற தற்பெருமை. வேலையை முடிக்காமல் போனால் கஷ்டப்பட்டோம் என்பதாலேயே தற்பெருமை. ரொம்ப வருடங்களுக்கு இது தொடர்ந்தது. அந்த நேரத்தில் வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தேடுபவர்களை இளக்காரமாக நினைத்ததும்கூட உண்டு.<br />
<br />
நாள் ஆக ஆகக் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் மாற்றம் ஏற்பட்டது. என் மன மாற்றத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக ஓஷோவின் புத்தகங்கள் என் மன மாற்றத்தை ஆரம்பித்து வைத்தன. நான் மிக மதிக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய கடிதம் அதீதமான தூண்டுதலைத் தந்தது. “சுய இரக்கம் என்பது தன் ரத்தத்தையே சுவைப்பது போன்றது” என்று அவர் சொன்னார். இன்றைக்கு ருசியாக இருக்கும், ஆனால் நாளடைவில் அதன் மூலம் நல்லது எதுவும் வராது.<br />
<br />
உங்கள் துன்பத்தை நீங்கள் சிலுவை சுமப்பதுபோல் சுமந்தாலோ, உங்களுக்கு இருக்கும் துன்பம் அநியாயமாக உங்கள்மேல் சுமத்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தாலோ, உங்கள் நிலையில் நானும் இருந்தவன் என்ற முறையில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றுதான். <b>“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது வாழ்வின் அடிப்படை உண்மைகளில் ஒன்று.</b> வாழ்க்கையில் நீங்கள் படும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் நீங்களேதான் காரணம். மற்றவரால் துன்பமோ இன்பமோ வந்ததாக நினைக்கும் வரை கடலலையில் அகப்பட்ட இலை போல நீங்கள் அலைக்கழிக்கப்படுவீர்கள்.Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-66908088234222044712015-12-22T05:10:00.000+05:302015-12-22T05:10:07.148+05:30மாறிக்கொண்டே இருக்கும் உலகம்உன் குழந்தை(கள்) வளர்ந்து வாழப்போகும் உலகம் நீ வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்திலிருந்து மாறுபட்டது. அந்த உலகத்தின் போக்கு, நியாயங்கள் அனைத்தையும் உன்னால் புரிந்துகொள்ள முடியாது.<br />
<br />
உன்னுடைய உலகத்தின் புதியதொரு நகலை உன் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க முயன்றால் நீ தோற்றுப் போவாய்; உன் குழந்தைகள் உன்னை ஒதுக்கி தாங்களாகவே தங்கள் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை வரும். உன் குழந்தைகள் தங்கள் உலகத்திற்குள் சென்று வெற்றிபெற உதவும் பாலமாக இருப்பதா, இல்லை அவர்களைத் தடுத்து நிறுத்தும் சுவராக இருப்பதா என்பது உன் முடிவு.Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-71650050007497818442015-08-06T23:12:00.000+05:302015-08-06T23:26:10.158+05:30புகைப்படக் கலைகலை மனித மனத்தை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது என்று சிறு வயதில் படித்ததுண்டு. இலக்கியம் மனித மனத்தை விரிவுபடுத்துகிறது என்பதை அனுபவத்தில் கண்டிருந்தாலும், மற்ற கலைகளால் மனம் எப்படி மேம்படுகிறது என்பது எனக்கு விளங்காமலேதான் இருந்து வந்தது.<br />
<br />
<div style="text-align: center;">
*****</div>
<br />
முதன்முதலில் நான் அமெரிக்கா வந்தது 2006-ல். இந்தியாவை விட்டு வெளியே முதல் முதலாகக் கால் வைத்ததும் அப்போதுதான். அமெரிக்காவில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருள்கள் ஏதாவது வாங்கலாம் என்று தோன்றியபோது வாங்கியதுதான் என்னுடைய முதல் கேமரா. கேமரா என்றால் என்ன, எது நல்ல கேமரா, எதுவுமே தெரியாமல் குறைந்த விலை என்பதால் மட்டுமே வாங்கிய கேமரா அது. அவ்வப்போது நல்ல படங்கள் எடுக்க முயற்சி செய்தேன் என்றாலும், புகைப்படக் கலையில் அப்படியொன்றும் எனக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை.<br />
<br />
சென்ற ஆண்டுத் தொடக்கத்தில்தான் ஒரு SLR கேமரா வாங்கினேன். SLR வாங்கியது, அதற்கு முன் நான் வைத்திருந்த கேமராவைவிட SLR கேமரா தெளிவான படங்கள் எடுக்கும் என்ற காரணத்தினால்தான். ஆனாலும் மற்றவர்கள் எடுக்கும் கலை நேர்த்தியுடைய படங்களைப் பார்க்கும்போது நாமும் இப்படிப் படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வருவதுண்டு. ஆரம்பத்தில் என்னுடைய SLR கேமராவில் எடுத்த படங்கள் என்னை ஓரளவுக்குப் பெருமைப்பட வைத்தாலும் நாள் ஆக ஆக எனது படங்களில் நேர்த்தி இல்லாமலிருப்பது உறுத்த ஆரம்பித்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3d_3g1Ih1XPlxlvpjgNItAxSxu6xGWlk0KSrIKMI93bZGovWC_jWuOnrnJV38-4J9nwAa9KtoNDpYDQWlgNUaVjVjQ4sB0BbnuecEMu1XXeor5O9aFpPeGJewCfOpJRWq8FKXcQ/s1600/dsc_9381.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="283" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3d_3g1Ih1XPlxlvpjgNItAxSxu6xGWlk0KSrIKMI93bZGovWC_jWuOnrnJV38-4J9nwAa9KtoNDpYDQWlgNUaVjVjQ4sB0BbnuecEMu1XXeor5O9aFpPeGJewCfOpJRWq8FKXcQ/s400/dsc_9381.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
தல்ஸ்தோயின் அன்னா கரீனினா நாவலில் ஓரிடத்தில் ஒரு வாக்கியம் வரும்: I cannot paint a Christ that is not in my heart. தன் மனதில் இல்லாத கதையை எழுத்தாளன் எழுதிவிட முடியாது. தன் மனதில் இல்லாத உருவத்தை ஓவியன் வரைந்துவிட முடியாது. தன் மனதில் இல்லாத அழகை புகைப்படம் எடுப்பவன் தன் கேமராவில் பதிவு செய்துவிட முடியாது.<br />
<br />
என் படங்களில் ஏன் அழகில்லையென்றால், என் கண் முன்னே என்னால் அழகைக் காண முடியவில்லை என்பதால்தான். கண்ணுக்கு அழகு தெரிந்துவிட்டால் அதைக் கேமராவில் பதிவு செய்வது அத்தனை கடினமில்லை. கண்ணுக்குத் தெரியும் அழகைப் பதிவு செய்ய ஒருவனுக்குத் திறமை வேண்டும்தான், ஆனால் திறமை பயிற்சியால் வாய்க்கும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். ஆனால் கண் முன்னே அழகைக் காண்பது மனம் விரிந்தால் மட்டுமே முடியும்.<br />
<br />
மனம் விரிந்து தன்னைச் சுற்றிலும் அழகைக் காண்பவன் மகிழ்ச்சியடைகிறான். மகிழ்ச்சி கொண்ட மனது அழகிய புகைப்படங்கள் எடுக்கிறது. மனதை விரிவுபடுத்தி மனிதனை மகிழ்ச்சிகொள்ளச் செய்வதே கலையின் நோக்கம். கலைஞனின் தேடலும் அதுவே.Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-58935751115973045452014-03-27T23:52:00.000+05:302014-03-27T23:52:12.721+05:30கஞ்சத்தனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிறு வயதிலிருந்தே என்னை வீட்டில் கஞ்சன் என்று அழைப்பதுண்டு. பணத்தைச் செலவழிக்க எனக்கு மனமே வராது. கிடைப்பது அனைத்தையும் சேர்த்து வைக்கவே விரும்புவேன். ஆளில்லாத அறையில் அரை நிமிடம்கூட விளக்கு எரியவோ காற்றாடி ஓடவோ விடமாட்டேன். ஓடிப்போய் அணைத்து விடுவேன். "போய்த் தண்ணி குடிச்சிட்டு வர்றதுக்குள்ள யாரு லைட்டை ஆஃப் பண்ணா? கண்ணாப் பயலாத்தான் இருக்கும்" என்பது வீட்டில் சாதாரணமாகக் கேட்க முடிந்த வசனம்.<br />
<br />
ஆனாலும் நான் நிறைய செலவழித்தேன். என்னிடம் இருக்கும் பொருள்களெல்லாமே விலை உயர்ந்தவை. வீட்டில் எல்லோரும் 300, 400 ரூபாய்க்குச் சட்டை வாங்கும்போது 1500 ரூபாய்க்குச் சட்டை வாங்கினேன். 6 லட்ச ரூபாய்க்குக் கார் வாங்க வசதியிருந்தபோது 11.5 லட்ச ரூபாய்க்குக் கார் வாங்கினேன். 17000 ரூபாய் கணினியை மாற்ற 1300 டாலர் (கிட்டத்தட்ட 72000 ரூபாய்) விலையுள்ள கணினி வாங்கினேன்.<br />
<br />
ஆனாலும் 800 டாலர் செலவழித்து ஒரு தொலைபேசி வாங்க மனம் வர மாட்டேன் என்கிறது. சில நேரங்களில் 150 டாலர் செலவழித்து காலணி வாங்கவும்கூட மனம் வர மாட்டேன் என்கிறது. உண்மையில் நான் கஞ்சனா இல்லை செலவாளியா... இன்றுவரை புரியவில்லை.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-52751145799054200672013-12-24T13:10:00.001+05:302013-12-24T13:10:15.202+05:30காரணங்கள்<p dir="ltr">பசி வரும்போதும் தூக்கம் வரும்போதும் அதற்கான காரணத்தை ஆராயாமல் பசியையும் தூக்கத்தையும் ஏற்றுக்கொள்ளும் நாம் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் மட்டும் காரணம் இல்லாமல் ஏன் ஏற்பதில்லை? காரணங்களேதும் இன்றி மனநிலையை ஏற்றுக்கொள்ளவும், பிறகு காரணங்களை நாடாமல் நேரடியாக மகிழ்ச்சியை நாடவும் பழகிக்கொண்டிருப்பதால் முன்பைவிடவும் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.</p>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-6981877977439077302013-10-22T11:12:00.002+05:302013-10-22T11:12:33.830+05:30Wedding, marriage — என்ன வித்தியாசம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
“வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு marriage. கண்டிப்பா வந்திருங்க” என்று திருமண அழைப்பிதழ் கொடுப்பது நம் ஊரில் சாதாரணம். ஆனால் marriage என்ற வார்த்தையை இவ்வாறு உபயோகிப்பது தவறு என்பது உங்களுக்குத் தெரியுமா?<br />
<br />
திருமண உறவு அல்லது சம்சாரம் என்பது கல்யாணம் ஆன நாளில் இருந்து வாழ்வு முடியும் வரை நீடிப்பது. அதுதான் marriage. அத்திருமண உறவு ஆரம்பிக்கும் விழா, கணவனும் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கும் அந்த விழா — அது wedding. ஆகவே wedding invitation என்பது சரி; marriage invitation என்பது தவறு. “வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு wedding. கண்டிப்பா வந்திருங்க” என்று உறவினரை அழைப்பதே சரியானது.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-43282398164974440682013-10-14T13:47:00.000+05:302013-10-14T13:47:35.765+05:30வீடு திரும்புதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
12 வருடங்களாகிறது, நான் வீட்டைவிட்டுத் தனியாகத் தங்கியிருக்க ஆரம்பித்து.<br />
<br />
முன்பெல்லாம் வாழ்க்கையில் என்னென்னவோ செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்றும் ஆசையிருக்கும். பயணம் செய்ய வேண்டும் என்பது ஒரு தீராத ஆசை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் முடிந்த இடங்களுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் அண்டார்டிகா செல்வது, கப்பலில் நீண்ட பயணம் செய்வது, <a href="http://en.wikipedia.org/wiki/Highway_1_(Australia)">உலகிலேயே நீளமான சாலை</a> முழுவதையும் பயணித்துக் கடப்பது போன்று பல நிறைவேறாத ஆசைகள் எப்போதும் இருந்து வருகின்றன. எவ்வளவுதான் முயற்சித்தாலும் இப்படி நிறைவேறாத சில ஆசைகள் இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. நிறைவேறாத ஆசைகள் பல இருந்தாலும் மனநிறைவுடன் வாழ முடியும் என்பதும் தெளிவாகிறது.<br />
<br />
வீட்டிலுள்ளவர்களோடு ஒரு நீண்ட சாலைப்பயணம் (roadtrip) செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சென்ற மாதம் குடும்பத்துடன் ராஜஸ்தான் சென்றோம். நல்ல பயணம். பல நாள் கழித்து இந்திய சாலைகளில் பயணம் செய்ததும், பல நாள் கழித்து அம்மா, அப்பா, அண்ணன்கள், பெரியம்மா, குழந்தைகள் எல்லோரையும் பார்த்ததும் மகிழ்ச்சியளித்தது. என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரிப் பயணங்கள் முக்கியம். என் வாழ்க்கையில் எவை முக்கியம் எவை முக்கியமல்ல என்று நான் வரையறுத்துக்கொள்ள இவை எப்போதும் உதவியாய் இருந்து வருகின்றன.<br />
<br />
யோசித்துப் பார்க்கையில் இப்போதைக்கு என் வாழ்க்கையில் நான் ஆர்வமாக எதிர்பார்ப்பது என்னுடைய ஓய்வுக் காலத்தை. கோவில்பட்டிக்குப் போய் அண்ணன்களுடன் ஒரே வீட்டில் மீண்டும் வாழும் காலத்தை. அப்போது வீட்டிலுள்ள பெண் குழந்தைகளெல்லாம் கல்யாணமாகி அவரவர் புகுந்த வீட்டிலிருப்பார்கள். பிள்ளை இல்லாத வீட்டில் கிழவர்கள் நாங்கள் துள்ளிக்குதிக்கும் அந்தக் காலம்... நன்றாக இருக்கும். 25-லிருந்து 30 வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். படிக்க ஆசைப்பட்டு ஆனால் படிக்க முடியாமல் போன புத்தகங்களைப் படித்துக் கொண்டும், நினைத்தவுடன் காரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டும்... நன்றாகத்தான் இருக்கும். இன்னும் கொஞ்சநாள் தான்.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-15351531547509050512013-10-03T12:21:00.002+05:302013-10-03T12:21:53.025+05:30மன்னிப்புக் கோரல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நான் பெரும்பாலான நேரங்களில் மன்னிப்புக் கேட்பதேயில்லை. ஏனென்றால் மன்னிப்புக் கேட்பது என்பது பெரும்பாலான நேரங்களில் பிரச்சனையைப் பூசி மெழுகவே பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்குச் சொல்கிறேன். எனக்கு நெருக்கமான ஒருவர் மன்னிப்புக் கேட்பது எப்போதுமே ஒரே மாதிரிதான்: “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்.” கொஞ்சம் யோசித்தாலே இந்த வாக்கியத்தின் அர்த்தமின்மை விளங்கும்.<br />
<br />
ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அதில் இரண்டு பேருக்கிடையில் கருத்து வேறுபாடு. அந்த வேறுபாட்டைச் சரி செய்ய நினைப்பவர் “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்” என்று சொல்லிவிட்டு, பிரச்சனையே தீர்ந்துவிட்டதாய் நினைத்துக்கொள்கிறார். இதனால் பிரச்சனைகள் அப்போதைக்கு மறக்கப்படுகின்றனவே தவிர அவை தீர்க்கப்படுவதில்லை. உண்மையில் பிரச்சனையைத் தீர்க்க விரும்பும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?<br />
<br />
அந்தக் கருத்து வேறுபாடு என்ன என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். அதில் தனது வாதம் தவறானதே என்று தோன்றினால் அத்துடன் தன்னுடைய கருத்தை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். மன்னிப்புக் கேட்பதைவிடவும் இது முக்கியமானது ஏனென்றால் இந்த மன மாற்றம்தான் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் வராமல் தவிர்க்கும். இந்த நேரத்தில் கேட்கும் மன்னிப்பு நேர்மையானது: தனது வாதம் தவறானது என்று உணர்ந்தபின் அந்த வாதத்தை முன்வைத்ததற்காகக் கோரும் மன்னிப்பு அது.<br />
<br />
சரி, யோசித்துப் பார்க்கையில் தனது வாதம் சரியானதே என்று தோன்றினால்? இப்போது மன்னிப்புக் கேட்டால் அத்துடன் தனக்குத் தானே ஒரு சத்தியமும் செய்துகொள்ள வேண்டும், இனிமேல் இதே போன்ற வாதத்தில் இதே நபருடன் ஈடுபடுவதில்லை என்று. இப்போது கேட்கும் மன்னிப்பு உறவைச் சரி செய்துகொள்ள; தனக்குள் எடுத்துக்கொள்ளும் சபதம் வருங்காலத்தில் இதே பிரச்சனை மீண்டும் வராமல் இருக்க. ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து, மீண்டும் மீண்டும் அதற்கே மன்னிப்பும் கோருவது சம்பந்தப்பட்டவருடனான நமது உறவையும் பாதிக்கும்; நம்முடைய சுயமரியாதைக்கும் பங்கமாகும்.<br />
<br />
அடுத்த முறை எதற்காகவேனும் மன்னிப்புக் கேட்குமுன் இதுபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-75396351553249290962013-06-02T17:33:00.000+05:302013-06-02T17:33:44.115+05:30ஈஸ்வர அல்லா தேரே நாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSLwbTl-X7D0VkF-knx9su8qAxm-9wyQEAYifnnp91tWvV_uD0-1EzTyzVBqYPtdrlfFAI9lFyjPp-2ZjqodA-OMnrxSh3hiX8OU1OYpiLjDaQaB4h3HQGEbBh2c5Fur03sYho-Q/s1600/100-00-0000-405-5_b.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSLwbTl-X7D0VkF-knx9su8qAxm-9wyQEAYifnnp91tWvV_uD0-1EzTyzVBqYPtdrlfFAI9lFyjPp-2ZjqodA-OMnrxSh3hiX8OU1OYpiLjDaQaB4h3HQGEbBh2c5Fur03sYho-Q/s1600/100-00-0000-405-5_b.jpg" /></a>ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரே நாம் நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். மத நல்லிணக்கத்தை மையக்கருவாகக் கொண்ட நாவல் என்றாலும் காந்தியம், காதல், சமூகம் என்று பலவற்றையும் விவாதிக்கும் நாவல். நாவலில் எனக்குப் பிடித்த வரிகள்:<br />
<ul style="text-align: left;">
<li>மனிதன் சம்பந்தப்பட்ட எல்லாமே மாயைதானே!</li>
<li>உயர்நோக்கமுள்ள கல்வியும் ஞானமும் எளிமையான வாழ்வோடு இணைகிறபோது, எத்தகைய இழிநிலையிலிருந்த கடையனும் அந்தணனே ஆகிவிட மாட்டானோ?</li>
<li>அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதே இல்லை. காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும். சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்! மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை. அவை மக்கினாலும் மடிந்து விடுவதில்லை.</li>
<li>மனிதர் இல்லாத எந்தப் புனித இடமும் பாழ் அடைந்து விடுவதுதான் இயல்பு.</li>
<li>நான் படிச்சவரைக்கும் பைபிள், குரான், ஜென்டவெஸ்தா எல்லாமே வேறு வேறு மத நூல்கள் என்று சொல்லப்பட்டாலும், ஒரு மாபெரும் புத்தகத்தின் பல அத்தியாயங்களைத் தனித்தனியே படிக்கிறதாகவே உணர்ந்தேன். அப்படி உணர்கிறவனை காந்தி மதத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லலாம்.</li>
<li>கொள்கைகளாலும் மரபுகளாலும் மதங்கள் அமைந்ததாகச் சொல்கிறார்கள். இல்லை... இல்லை. அது குல்லாய்களாலும் குடுமிகளாலும் சில குறிப்பிட்ட அன்னியச் சொற்களைக் கலந்து தாய்மொழியில் பேசுவதாலும் வேறு பல புறத்தோற்றங்களினாலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறதோ.</li>
<li>மதத்தை ஏற்றுக்கொள்ளலாம்; விட்டுவிடலாம். அதைச் சீர்திருத்த நமக்கு என்ன உரிமை இருக்கிறது.</li>
<li>மதம்னு சொல்லுங்கோ, மார்க்கம்னு சொல்லுங்கோ, என்ன வேண்டும்னாலும் சொல்லுங்கோ... பெத்தவங்க பிள்ளைங்களுக்கு வாழறதுக்கு வேண்டிய நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கறாகளே, அதுக்குப் பேர்தான் மதம்.</li>
<li>காலம் காலமாய் இந்தக் காதல் என்கிற பெண்களைப் பிடித்த ‘பீடை’ விவகாரம் இப்படித்தான் தொடர்கிறது. பார்த்தார்கள், சிரித்தார்கள், ஒருவரைப்பற்றி ஒருவர் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு கதைகளுக்கும் வதந்திகளுக்கும் இலக்கானார்கள் என்பது தவிர, வேறு ஆழ்ந்த காரணம் ஏதும் இந்தக் காதலுக்கு இல்லை.</li>
<li>பாடுபடறவக என்னைக்கும் பாடுபடத்தான் வேணும். பலனை அனுபவிக்கிறவக என்னைக்கும் பலனைத்தான் அனுபவிப்பாக போலிருக்கு.</li>
<li>அஞ்சி அஞ்சி அனுபவிக்கிற இன்பம் மிக விரைவில் நைந்து போய்விடும்.</li>
<li>பொதுவாக மாலைநேரம் என்பது மனிதர்களுக்குக் குதூகலம் தருவதாகவும், கொண்டாடத் தக்கதாகவும் அமைகிறது. இந்தச் சமூக உணர்வே இல்லாமல் தனிமைப்பட்ட காதலர்கள்தான் இந்த நேரத்தை ஒன்று திருட்டுத்தனமானதாக, அல்லது சோகமயமானதாக ஆக்கிக்கொண்டு விடுகிறார்கள்.</li>
<li>அதனால்தான் சொன்னேன், ‘காதல்தான் உண்டு. அதில் தோல்வி என்பதே இல்லை’ என்று. ஆனால் எப்போது [காதலுக்குத்] தோல்வி இல்லை? அந்தக் காதலர்கள் பிரிந்திருந்தாலும் சேர்ந்திருந்தாலும் பெரிய லட்சியங்களோடு தம்மை இணைத்துக்கொண்டிருந்தால் ஒருபோதும் அவர்களுக்குத் தோல்வி இல்லை. பிரிந்த அக்காதலர்களை அந்த லட்சியங்களே சேர்த்து வைத்துவிடும்.</li>
<li>மிகவும் அவசியமாகவும் அர்த்தமுடையதாகவும் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டுக் காதலை உணர்பவர்களே லட்சியம் என்ற ஒன்றை எதன் பொருட்டும் கைவிடாமல் மணவாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். எனவே அப்படிப்பட்டவர்களின் காதல் அவர்களை ஒரு நோய்போல வருத்துவதே இல்லை. லட்சியமில்லாத மனிதர்களுக்கு ஏற்படுகிற ஏற்படுகிற காதலே நோய். ஒரு சமூகம் அதை நோயாகவே பாதிக்கும்; அவர்கள் காதலும் அப்படியே நாளடைவில் ஒரு நோயே ஆகிவிடும்.</li>
<li>ஒரு குடும்பத்தில் இல்லாமையும் வறுமையும் இருப்பதுகூடக் கொடுமையல்ல; அது காரணமாக அவர்கள் அன்பற்றவர்களாகவும் பண்பற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்களே, [அதுவே கொடுமை].</li>
<li>காலமும் நேரமும் கைகூடி வருகிறபோதுதான் ஒருவர் எடுத்த காரியம் யாவினும் வெற்றியாகிறது.</li>
<li>எந்த ஜாதியிலும் ஏழைகளுக்குத்தான் கஷ்டம்.</li>
</ul>
</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33457444.post-9356440796401511182013-05-12T08:14:00.000+05:302013-05-12T08:14:23.921+05:30பூரண கும்பம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
“பெரியவர்கள் எழுந்தருளும்போது பூர்ணகும்பம் வைக்க வேண்டும்” என்று ஒரு சாஸ்திர விதி இருப்பதாக சடகோபன் ராமானுஜன் <a href="https://picasaweb.google.com/lh/photo/uxTzHBve6FtgR3NdNJT6z9MTjNZETYmyPJy0liipFm0">தன்னுடைய படமொன்றில்</a> எழுதியிருக்கிறார். இதில் “பெரியவர்கள்” என்பவர்கள் பெரும்பாலும் இந்த மக்களின் வாழ்க்கை நலத்தை உயர்த்த ஏதேனும் செய்ய வல்லவர்களாக இருப்பார்கள்.<br />
<br />
வளம் மிகுந்த ஓர் ஊருக்குப் பெரியவர் ஒருவர் வந்தால் கும்பத்தில் என்ன காண்பார்? நெய், பால் போன்ற விலையுயர்ந்த, வளத்தை வெளிக்காட்டும் திரவங்கள் கும்பங்களில் இருக்கும். அதே பெரியவர் வளம் குறைந்த ஒரு ஊருக்குப் போனால்? பெரும்பாலான கும்பங்களில் தண்ணீர் இருக்கும். தெரு வழியே செல்கையிலேயே மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இது ஒரு வழி. மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டு அறிவதைக் காட்டிலும் எளிமையான சிறந்த வழி.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-33457444.post-7443499796498421652013-04-05T04:16:00.000+05:302013-04-05T05:58:14.997+05:30உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வழக்கமாகத் தண்ணீர் குடிக்கும் ஏரிக்கு வந்தது அந்த யானை. அங்கு ஏரி முழுவதுமாக உறைந்து குடிக்க முடியாமல் போயிருந்தது. கடந்த சில வாரங்களாகவே அளவுக்கு மீறிக் குளிர்ந்திருந்த ஏரி இப்போது இல்லாமலே போனது யானைக்கு ஏமாற்றமாக இருந்தது. தாகத்துடனேயே திரும்பிச் சென்றுவிட்டது.<br />
<br />
சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே ஏரிக்கு யானை வந்தது. அப்போதும் உறைந்தே இருந்த ஏரியிடம் யானை கேட்டது, “எல்லோருடைய தாகத்தையும் தீர்க்கும் புனிதமான பணி செய்யும் நீ இப்படி மாதக்கணக்கில் உறைந்து போகலாமா, இது நியாயம்தானா?” என்று.<br />
<br />
ஏரி சொன்னது, “நியாயமா என்று என்னைக் கேட்கிறாயா நீ? எத்தனையோ வருடங்கள் நான் நீராக இருந்து உன்போன்ற விலங்குகளின் தாகம் தீர்த்தேன். என்னுள் மீன்களும் பாம்புகளும் தவளைகளும் தாவரங்களுமாக எத்தனையோ உயிரினங்கள் வாழ வகை செய்து கொடுத்தேன். இந்தப் பாழாய்ப்போன காற்றுக்கு என்ன கோபமோ, என்னால் தாங்கமுடியாத அளவு குளிராக வீசி இப்படி என்னை உறைய வைத்துவிட்டது. என் மேல்மட்டத்தில் பல அடி கனத்துக்கு நான் உறைந்ததால் உன்போன்ற விலங்குகளுக்கு உதவ முடியாமல் போனாலும், ஆழத்தில் நான் இன்னும் நீராகவே இருந்து என்னுள் வாழும் உயிர்களைக் காக்கின்றேன். நியாயமா என்று என்னைக் கேட்காதே, குளிர்ந்து வீசும் இந்தக் காற்றைக் கேள்.”<br />
<br />
காற்றைக் கேட்பது கஷ்டமில்லை. காற்றுதான் எல்லா இடத்திலுமே இருக்கிறதே. அதே இடத்தில் நின்றவாறே யானை காற்றிடம் அது திடீரென இப்படிக் குளிர்ந்துபோனது நியாயமா என்று கேட்டது. காற்று தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல ஆரம்பித்தது. “ஒரு சிறிய இடத்தில் இருந்து வாழும் உங்களுக்கு என் நிலைமை புரிவது கஷ்டம்தான். பரந்த பூமியைச் சுற்றிலும் பல கிலோமீட்டர் உயரத்திற்குப் பரவியிருக்கிறது என் உடல். அப்படி பூமியைவிடவும் பெரிய உடல்கொண்ட என்னுடைய வெப்பத்தை எதெதெல்லாம் பாதிக்கும் என்பதை உங்களுக்குச் சொல்லி விளக்க முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ளுங்கள். மற்ற எல்லாரையும் போலத்தான் நானும். என்னில் ஏற்படும் மாற்றங்களுக்கு நான் மட்டும் காரணம் இல்லை. எப்படி இந்த ஏரி என்னால் உறைந்து போனதோ, அதுபோல என்னில் ஏற்படும் மாற்றங்களையும் வெளியிலிருந்து மற்றவர்களே தூண்டுகிறார்கள்.”<br />
<br />
யானைக்கு இந்த பதில் ஆச்சரியம் அளிக்கவில்லை. குற்றமென்று வருகையில் மற்றவரைக் கைகாட்டுவது இயல்புதானே. யானை காற்றிடம் சொன்னது, “நீ சொல்வது நியாயமாகத்தான் இருக்கிறது. உன்னை இப்படிக் குளிரவைத்தது யார் என்று சொல், நான் அவர்களிடம் சென்று கேட்கிறேன். மாதக்கணக்கில் இப்படி நீரை உறைய வைத்தால் மிருகங்கள் எப்படி வாழும்? இதற்குக் காரணமானவர்களிடம் சென்று நான் அவர்கள் செய்யும் அநியாயத்தைச் சுட்டிக்காட்டப் போகிறேன்.”<br />
<br />
காற்று கொஞ்ச நேரம் யோசித்து பதில் சொன்னது. “இதை யார் ஆரம்பித்தார் என்று தேடிப் போக நீ நினைப்பதன் காரணம் புரிகிறது. ஆனால் ஆரம்பித்தவர் மட்டுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வது சரியாகுமா?” காற்று சொல்ல வருவது யானைக்கு விளங்கவில்லை. “நீ என்ன நினைக்கிறாய் என்று புரியவில்லை, கொஞ்சம் விளக்கமாகச் சொல்” என்று காற்றைக் கேட்டது.<br />
<br />
“என்னைச் சுற்றி மாற்றம் நிகழும்போது நான் குளிர்கிறேன் என்றால் அதற்கு நான் காற்றாக இருப்பதும்தானே காரணம்? உன்னையும் மற்ற விலங்குகளையும் இந்த ஏரியையும் செடிகொடிகளையும் ஒரே அளவில்தானே நான் குளிர வைக்கிறேன். ஆனாலும் இந்த ஏரி மட்டும்தானே உறைகிறது... நீங்கள் உறையாமல்தானே இருக்கிறீர்கள்?”<br />
<br />
இதைக் கேட்டதும் ஏரிக்குக் கோபம் வந்தது. “அப்படியானால் உறைந்தது என் குற்றம் என்கிறாயா?” என்று கேட்டது. “இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை. குளிரில் உறைவது உன்னுடைய குணம். உலகத்தைக் குளிரூட்டுவதும் வெப்பமூட்டுவதும் என் குணம். ஒருவேளை நான் இப்படிக் குளிராமலேயே இருந்திருந்தால் உனக்கு உறையும் குணம் உண்டு என்பதே உனக்குத் தெரிந்திருக்காதல்லவா? உன்னைப் பற்றி நீயே அறிந்துகொள்ள நான் ஒருவகையில் காரணமாய் இருந்தேன் என்று நான் சொன்னால் அதுவும் சரிதானே?”<br />
<br />
யானைக்கு அந்த நியாயம் புரிந்தது. நடப்பது ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள் இருக்கும் என்று தெரிந்தாலும் தன்னுடைய இப்போதைய துன்பத்துக்கு யார் பொறுப்பு என்று அதற்கு விளங்கவில்லை. காற்றிடம் கேட்கலாமா என்று யோசித்தது. ஆனால் காற்றும்தான் என்ன சொல்லும், நீரில்லாமல் இருக்க முடியாது என்பது உன் குணம், ஆகவே உனக்கும் இதில் பொறுப்பு உள்ளது என்று சொல்லும். யார் காரணம் என்று யோசிப்பதைவிட வேறு எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்பது உத்தமம் என்று முடிவு செய்த யானை ஏரிக்கும் காற்றுக்கும் நன்றி சொல்லி விடைபெற்றது.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-33457444.post-35542813418893326972013-01-15T07:38:00.000+05:302013-01-15T07:38:00.268+05:30மருத்துவம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த சில மாதங்களாக என் வாயின் இரண்டு பக்கங்களிலும் காயமாகி இருந்தது. சிட்னியில் வீட்டில் இருக்கும்தோறும் காயம் மட்டுப்படாமலே இருந்தது. மருந்து போட்டால் கொஞ்சம் குறையும், ஆனால் ஓரிரு நாள்களிலேயே மீண்டும் வந்துவிடும். பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் காயம் சிலநாள்களிலேயே ஆறியது; சிட்னி திரும்பி வந்ததும் சிலநாள்களிலேயே காயம் பழையபடி திரும்பி வந்தது. காயத்தைச் சுற்றிலும் எப்போதும் தோல் வறண்டிருக்கும்.<br />
<br />
முதலில் நான் நினைத்தது என்னவென்றால் சிட்னியின் பருவநிலை காரணமாக என் தோல் வறண்டு போகிறது. மிகுந்த வறட்சியால் தோல் வெடித்துக் காயம் உண்டாகிறது. பயணம் செய்த இடங்களின் (கோவில்பட்டி, சான் ஃபிரான்சிஸ்கோ, பாஸ்டன்) பருவநிலையை — முக்கியமாக காற்றிலுள்ள ஈரப்பதத்தை (humidity) — சிட்னியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய மாறுதல் ஒன்றும் தெரியவில்லை. அதனால் நான் நினைத்தது சரியான காரணம் இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் வேறு எந்த வகையிலும் சிட்னியில் இருக்கும்போது மட்டும் வரும் காயங்களை விளக்க முடியவில்லை.<br />
<br />
சென்ற வாரம் தற்செயலாக எனக்குத் தோன்றியது. ஒருவேளை நான் உபயோகிக்கும் சோப் எனது காயங்களுக்குக் காரணமாக இருக்கலாமோ என்று. என் தோலில் சிலபகுதிகளால் ஈரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே முடியாது. சில சோப்புகள் தோலில் மிக ஆழமாகச் சுத்தம் செய்து தோலில் இருக்கும் எண்ணெய்ப்பசையை முழுதும் நீக்கிவிடும். நான் வீட்டில் உபயோகித்த சோப்பும் அப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இப்போது சிலநாள்களாக மனைவியின் shower gel-ஐ உபயோகித்து வருகிறேன். காயமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மட்டுப்பட்டுவிட்டது.<br />
==========<br />
<br />
<br />
முன்காலத்தில் பாரம்பரிய இந்திய மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் நோயாளிகளின் வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை போன்ற எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார்களாம்.<br />
<br />
என் சொந்த அனுபவத்தில் நான் அறிந்துகொண்ட ஒன்று, மனித உடல் என்பது ஒரு நீரோட்டம் போல ஓடிக்கொண்டே இருப்பது. அதனை அறிந்துகொள்வதற்கும் வைத்தியம் செய்வதற்கும் அதன் ஓட்டம் பற்றிய அறிதல் கொஞ்சம் இருக்க வேண்டும்.<br />
<br />
ஒரே நதி மலையில் ஓடும்போது ஓரு வேகம்-வீச்சு-சுவை-ஆழத்துடனும், தரையில் ஓடும்போது மற்றொரு வேகம்-வீச்சு-சுவை-ஆழத்துடனும் ஓடுகிறது. அந்த நதியை ஏதேனும் ஓரிடத்தில் மட்டும் ஆராய்ந்தால் அந்நதியின் குணநலன் நமக்கு முழுதும் தெரியாதுபோக வாய்ப்புள்ளது.<br />
<br />
அதேபோலத்தான் மனித உடலும். இந்தக்காலத்து மருத்துவர்கள் பலரும் தங்களது நோயாளியைப் பற்றிய ஒரு பரந்த புரிதலுடன் வைத்தியம் செய்வதில்லை. நோயாளி மருத்துவரிடம் செல்லும் அந்த நிமிடத்தில் உடல் இருக்கும் நிலையைப் பொறுத்து மட்டுமே மருத்துவம் செய்யப்படுகிறது.<br />
<br />
என் தாத்தா முன்பு சொல்வார் “டாக்டர்களுக்கு என்ன தெரியும்? கேட்டா எனக்கு சுகர் இருக்கும்பான். நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று. சின்ன வயதில் அவர் அப்படி ஏன் சொன்னார் என்று புரியவில்லை. அவர்தான் விவரமில்லாமல் பேசுகிறார் என்றுதான் நினைக்கத்தோன்றியது. ஆனால் உண்மையில் அவருக்கிருந்த உபாதைகளை மருத்துவர் எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் இப்போது நினைக்கிறேன். அவரைப்போலவே நானும் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதைத் தவிர்த்து, கூடுமானவரை நானே என் ஆரோக்கியத்துக்குத் தேவையானதைக் கவனித்துக்கொள்கிறேன்.<br />
</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-33457444.post-18055477605103331732012-11-18T04:42:00.001+05:302012-11-18T04:42:37.901+05:30தியான மந்திரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திருக்குறளை மற்ற சில இலக்கியங்கள் போல அல்லாமல் தியான மந்திரங்கள் போலப் படிக்க வேண்டும். ஒரு குறளைப் படித்து அதன் அர்த்தம் புரிந்ததும் நிறுத்திவிடாமல், அதை மனதுக்குள் வைத்து அசை போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குறளின் முழுமையான பயனை நாம் அடைய முடியும் என்று ஜெயமோகன் எங்கோ சொன்னதாக ஞாபகம்.<br />
<br />
சில திருக்குறள்கள் அப்படித்தான். படித்து, பொருள் விளங்கியதும் அவை அடிக்கடி நம் நினைவுக்கு வந்துபோய்க்கொண்டே இருக்கும். திருக்குறள் தான் என்றில்லை... சினிமாப் பாடல்களோ, சில கவிதை அல்லது நாவல் வரிகளோ, பேசும்போது சிலர் சொன்னதோ[1] கூட அவ்வாறு வந்து போகும். அவற்றை மனதில் அசைபோடும் தோறும் நம்முள் அவை மாற்றத்தை உருவாக்கும்.<br />
<br />
சமீப காலத்தில் மிகப்பெரிய ஒரு மாறுதலை எனக்களித்த ஒரு வரி பாரதியுடையது. மிகவும் எளிமையான வரி. ‘<b>அச்சம் தவிர்</b>.’ ரொம்ப எளிதாகத் தோன்றும் இந்த அறிவுரையைச் செயல்படுத்துகையில்தான்[2] அதன் வீச்சு எனக்கு விளங்கத் தொடங்கியது.<br />
<br />
பயம் என்பது ரொம்பவும் அடிப்படையானது. கிட்டத்தட்ட நம் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு எண்ணத்திலும் பயம் இருக்கிறது. எல்லா இடத்திலும் இருக்கும் ஒன்றைப் பிரித்துப் பார்ப்பது கடினம் என்பதால் அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம். அதைக் கண்டறிவதே ஒரு மகத்தான அனுபவம். பயத்தை நம் செயலிலும் எண்ணத்திலும் பிரித்துப் பார்க்க முடிந்துவிட்டால் அதன்பின் அதை நீக்குவது எளிது.<br />
<br />
பயம் என்பது நமக்கு நாமே இட்டுக்கொள்ளும் விலங்கு. அதைக் கழற்றி எறிகையில் கிடைக்கும் சுதந்திரம் நம் உலகத்தின் பரப்பை விரிந்ததாக்குகிறது.<br />
----------<br />
<br />
<div class="note">
[1] மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் படிக்க விண்ணப்பித்திருந்த நேரம் அது. நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்பது வயிற்றில் புளிகரைத்துக் கொண்டிருந்தது. குடும்ப நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், ‘English is after all a foreign language... you don’t have to be fluent in it’ என்று. அந்த ஒரு வாக்கியம் பல வருடங்கள் மனதிற்குள் வந்துபோய்க்கொண்டிருந்தது. அதை அவர் அன்று சொல்லாமல் போயிருந்தால் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பேன்.</div>
<div class="note">
[2] இந்த மாதிரியான அறிவுரைகளை நான் ‘செயல்படுத்தினேன்’ என்று சொல்வது தவறு. அந்த அறிவுரையை நினைத்துக்கொள்வேன், அவ்வளவுதான். அது மனதில் இருக்கையில் அதற்குமுன் தெரியாத சில விஷயங்கள் தெரியவரும். எந்தவிதமான முயற்சியுமே இல்லாமல் என் நடத்தை மாறும். ‘கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை’ என்போமே, அது மாதிரி மாற்றம் அதுவாகவே நடந்தேறும்.</div>
</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-33457444.post-20848524858572832082012-10-09T05:21:00.000+05:302012-10-09T05:21:10.291+05:30மதிப்பீடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிலையாக மாறிப்போவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் சிலையாக நிற்கும் மனிதன் சிலைப்படுத்தப்பட்டிருக்கும் பண்புகளிலிருந்து ஒருகாலத்தில் மாறுபட்டிருந்தான் என்பதையோ, இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் மாறியிருக்கக்கூடும் என்பதையோ சொல்ல முடியாமல் போவதுதான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர்களை வைத்தே மீதிப் பதினோரு ஆண்டுகளிலும் மதிப்பிடப்படும் குறிஞ்சிச்செடி போல மனிதர்களும் பெரும்பாலும் தவறாகவே மதிப்பிடப்படுகிறார்கள்.</div>
Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.com2