‘கற்பழிப்பு’ என்னும் அபத்தம்

கற்பு என்றால் ஒழுக்கம். ஒழுக்கம் தவறுவது என்பது ஒருவரது சொந்தச் செயலாலேயே நிகழ முடியும். நான் பொய் சொன்னால் நான் ஒழுக்கம் கெட்டவன்; என்னிடம் ஒருவர் பொய் சொன்னால் பொய் சொன்னவரே ஒழுக்கம் கெட்டவர்; எனது ஒழுக்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்தால் அதை ‘கற்பழிப்பு’ என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணைக் ‘கற்பிழந்தவள்’ என்றும் கூறுகிறோம். இந்த வார்த்தைப் பிரயோகம் நம்முடையது ஆணாதிக்க சமுதாயம் என்பதற்கு இன்னொரு சான்று. ஒரு ஆண் தவறு செய்த இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

நல்லதொரு தமிழகத்தை விரும்பும் அனைவரும் (முக்கியமாகப் பெண்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்) பெண்களைப் பழிக்கும் இந்த வார்த்தைகளை இனிமேல் உபயோகிக்கக் கூடாது என்பது என்னுடைய விருப்பம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்