துன்பப்படுதல்

அடிபட்ட குழந்தை அழுகிறது. வலி குறைந்ததும் விளையாட்டு மீண்டும் தொடர்கிறது. ஏமாற்றமடைந்த குழந்தை அழுகிறது. கொஞ்ச நேரத்திலே வேறு ஏதோ அதன் கவனத்தை ஈர்க்கிறது; குழந்தை அழுகையை மறக்கிறது. பயமடைந்த குழந்தை அழுகிறது. அன்னை வந்து பயம் போக்கியதும் அழுத குழந்தை சிரிக்கிறது.

குழந்தையாய் இருக்கையில் மட்டுமல்ல. வளர்ந்த பிறகும்கூட அழும் நம் மனம் சீக்கிரமே அழுகையை நிறுத்தி வேறு எதையோ நினைக்க ஆரம்பிக்கிறது. நாம்தான் அதை அனுமதிப்பதில்லை. மீண்டும் மீண்டும் "எனக்கு இப்படி நடந்ததே" என்று வலுக்கட்டாயமாக யோசித்து அழுகையை வரவைத்துக் கொள்கிறோம்.

துன்பம் நேர்ந்திருக்கும்போது நாம் கவலைப்படத்தான் வேண்டும் என்று நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் நிபந்தனைதானே இது?

பார்க்க: தீதும் நன்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

அதீத ஒத்திகை (overrehearsal)