இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தவறு

பூக்காத பூக்களுக்காக மன்னிப்புக் கேட்பதில்லை மரங்கள்.

அதிகாலை எண்ணங்கள்

வெற்றிடம் பற்றிப் படித்திருக்கிறீர்களா?  இங்க் ஃபில்லரால் மை ஊற்ற முடிவது வெற்றிடத்தால் தான்.  இங்க் ஃபில்லரை நாம் விரலால் அழுத்தும் போது அதன் உள்ளே உள்ள காற்று வெளியேறுகிறது.  நம் விரலை ஃபில்லரில் இருந்து எடுத்து அழுத்தத்தை நீக்கும் போது ஃபில்லருக்குள் காற்று கூட இல்லாத வெற்றிடம் உருவாகிறது.  வெற்றிடத்திற்கு ஒரு பண்பு உண்டு — அதன் அருகில் இருப்பது எதுவானாலும் விசையுடன் தன்னோடு ஈர்த்துக்கொள்ளும்.  இங்க் ஃபில்லரின் துவாரம் மைக்குள் மூழ்கி இருப்பதால் ஃபில்லர் மையை தன்னுள் இழுக்கிறது.  இது தான் புட்டிக்குள் இருக்கும் மை ஃபில்லருக்குள் ஏறக் காரணம்.  இதே அடிப்படையில் தான் அடி பம்பு, தண்ணீர் மோட்டார் எல்லாமே இயங்குகிறது. ========== ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?  உங்கள் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகின்றன?   ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு என்று வைரமுத்து எழுதியிருக்கிறார்... அது உண்மைதான்.  காலையில் எழுந்ததும் சில கணங்கள் உங்கள் மனதில் எண்ணங்கள் ஏதும் தீவிரமாக இருப்பதில்லை.  முந்தைய தினம் நடந்த சம்பவங்கள், இன்று செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்

ஏணி

உண்மை என்னும் உயரம் ஏறப் பொய்யே ஏணி.