இடுகைகள்

ஜூலை, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நந்தலாலா

இதைவிடக் கேவலமா ஒரு படத்தை மிஷ்கின் எடுக்க முடியுமாங்கிறது கொஞ்சம் சந்தேகம் தான்.

வண்டித்தடம்

பள்ளிக்கூட நாள்களில் முழங்கால் போடுவது ஒரு பொதுவான தண்டனை.  மணல் தரையில் கூட முழங்கால் போடச் சொல்வார்கள்.  மைதானத்தில் வகுப்பு இருந்தால் மைதானத்து மணல் தரையில்தானே முழங்கால் போட முடியும்!  வகுப்பில் என்னால் பேசாமல் இருக்க முடியாது.  அதனால் பலமுறை தண்டிக்கப் பட்டிருக்கிறேன்.  தாமதமாக வருவது, வீட்டுப் பாடம் முடிக்காதது என்று பல விதங்களிலும் தண்டனை பெற்றிருப்பதால் முழங்கால் போடுவதெல்லாம் அப்போது எனக்கு ரொம்ப சாதாரணம். முழங்கால் போட எப்போதும் துணை இருக்கும்.  எந்தத் தவறாயினும் நம்முடன் சேர்ந்து ஒரு ஐந்தாறு பேரும் செய்திருப்பார்கள்.  "எப்பா... காலு வலிக்கி(து)" என்று பையன்கள் இடையிடையே உட்கார்வதோ நிற்பதோ உண்டு.  அப்போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும், உண்மையிலேயே இவர்களுக்குக் கால் வலிக்கிறதா இல்லை சும்மா அப்படிச் செய்கிறார்களா என்று.  நேர்மையாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு அப்போதே இருந்தது.  அதனால் தண்டனையில் ஏமாற்றுவது எனக்குப் பிடிக்காது.  எனக்குக் கால் வலித்ததும் இல்லை. சில வருடங்களுக்கு முன் கால் உடைந்து சரியாகிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள் டாக்டர் சொன