இடுகைகள்

ஜூன், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அருணாச்சலம் பாடல்கள்

படம்
பல வருடங்களுக்குப் பிறகு அருணாச்சலம் படப் பாடல்களை இன்று கேட்டேன்.  ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்தது "சிங்கம் ஒன்று புறப்பட்டதே".  மலேசியா வாசுதேவன் பாடத் தொடங்கியதும் வில்லுப்பாட்டு தெருக்கூத்து மாதிரி ஒரு பின்னணி இசை தொடங்கி என்னை ரசிக்கவே விடாமல் பண்ணி விட்டது.  கம்பீரமான பாடலாக இருக்க வேண்டியது காமெடிப் பாடல் மாதிரி ஆகிவிட்டது.  (கலர் கனவுகள் படத்தில் வரும் "சப்பா சப்பா" பாட்டில் வரும் இசை தான் ஞாபகத்திற்கு வந்தது.) அடுத்தது "அதான்டா இதான்டா". ஏகப்பட்ட தடவை கேட்ட பாடல்தான்.  ஆனால் இன்று தான் ஒரு விஷயத்தை கவனித்தேன்.  எஸ் பி பாலசுப்பிரமணியம், அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தை மனதில் வைத்துப் பாடியிருக்கிறார்.  "என் கண்ணிரண்டைக் காப்பாற்றும் கண்ணிமையும் நீதான், என் தோள்களிலே முழுபலமாய் இருப்பவனும் நீதான்" என்பது போன்ற வரிகளில் அந்தத் "தானை" அழுத்தி உச்சரிக்காமல் சாதாரணமாகப் பேசுவது போல் பாடியிருக்கிறார்.  அழுத்தி உச்சரித்தால் அது மேடையில் சொற்பொழிவு ஆற்றுவது போல் ஆகியிருக்கும். ஒரு டிவி நிகழ்ச்சி ஒன்றில் எஸ்பிபி இளம் பாடக