இடுகைகள்

பிப்ரவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி

ஆதி இந்து மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர்.  காளி கசாப்புக் கடை வைத்திருக்கும் குடும்பத்திலிருந்து வந்து குலத் தொழிலையே செய்து வருபவர். ஆதியின் நட்பாலும், அவரது ஆஸ்ரமத்தின் வாழ்க்கையைப் பற்றி அறிய நேர்ந்த அனுபவத்தாலும் காளிக்கு தனது 'கொலைத் தொழிலைப் பற்றி' ஒருவகைக் குற்ற உணர்வு மனத்துள் வளர்ந்ததுதான் கண்ட பலன். அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள காளி முயன்ற போது, அவன் நம்பிய இந்துமதப் பெரியவர்கள் எல்லாம் ஒரே குரலில் ஜீவகாருண்யத்தைப் பற்றியே அதிகம் பேசினார்கள்!  'தான் ஒருவன் ஜீவகாருண்யவாதியாய் ஆகிவிடுவதால் இந்த விலங்குக்கு என்ன காருண்யம் நேர்ந்துவிடப் போகிறது...?  ஒரு பாவத்திலிருந்து தனியொரு மனிதன் தப்பித்துக் கொள்வதா பிரச்சனை?  அந்தப் பாவமே முற்றாகத் தவிர்க்கப் படுவதற்கு என்ன வழி?  அப்படி தவிர்க்கவொண்ணாத ஒரு செயல் -- ஒரு தொழில் -- ஒரு வாழ்க்கை முறை எப்படி ஒரு பாவமாகும்?  உலகிலுள்ள மனிதர்கள் எல்லோரும் தாவர உணவையே உட்கொள்வது என்று தீர்மானித்து விட்டால், மனித வாழ்க்கை இன்னும் பல நெருக்கடியான பிரச்சனைகளில் சிக்கி அல்லலுறும்.  உலகம் முழுவதற்கும் ஒவ்வாத ஒரு நடைமுறை -- எல்லா ம

அச்சம் தவிர்

படம்
அஞ்சாதே படத்தின் அச்சம் தவிர் பாடலை சில நாட்களுக்கு முன் தற்செயலாகக் கேட்கும்போது தான் கவனித்தேன்.   புதிய ஆத்திசூடியில்  மீண்டும் மீண்டும் பாரதியார் வலியுறுத்துவது பயப்படாமல் இருக்க வேண்டுமென்பதைத் தான்.  கீழ்க்கண்ட அத்தனையும் நேரடியாக பயத்தை விடச்சொல்லும் வரிகள்: அச்சம் தவிர் கீழோர்க்கு அஞ்சேல் கேட்டிலும் துணிந்து நில் சாவதற்கு அஞ்சேல் செய்வது துணிந்து செய் தீயோர்க்கு அஞ்சேல் தொன்மைக்கு அஞ்சேல் தோல்வியில் கலங்கேல் பேய்களுக்கு அஞ்சேல் கொஞ்ச நாள்களுக்கு முன் என் பயத்தை நானே நேரடியாகப் பார்க்க நேரிட்டது.  சின்னச் சின்ன விஷயங்களில் கூட பயப்படுவதையும் அதனால் வாழ்க்கையில் தோன்றும் மாறுதல்களையும் பார்க்க பிரமிப்பாக இருந்தது.  பயம் புற்றுநோய் போலப் பரவி நம் வாழ்க்கையையே அழித்துவிட வல்லது.  அதனால் தானோ என்னவோ பாரதியும் பயத்தை உதறுமாறு பல கவிதைகளில் அறிவுறுத்துகிறார்.  (அச்சமில்லை பாட்டை அறியாதவர் உள்ளனரா என்ன!) மேலுள்ள வரிகள் தவிர்த்து, புதிய ஆத்திசூடியில் என்னைக் கவர்ந்த வரிகள் இவை: கற்றது ஒழுகு காலம் அழியேல் தன்மை இழவேல் தாழ்ந்து நடவேல் துன்பம் மறந்திரு தூற்றுதல் ஒழி தவத

சோடியமுகம்

காலப்பயணம் முடித்து இப்போது தான் திரும்பினேன். அணுக்களைப் பார்த்தே தீர வேண்டுமென்ற ஆசை தான். சோடியம் தான் கிடைத்தது. பார்த்தேன், பல நூறு சோடியத்தை. எல்லாமே 11 எலெக்ட்ரான் தான். ஆயினும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முகம். சாப்பிட அமர்ந்தேன். அத்தனை முகமும் சிரித்தது ஒரு சோற்றுப் பருக்கையிலிருந்து.

தாத்தா

சின்னப் பையனாய் இருக்கும் போது என் கண்ணில் எப்போதுமே முதலாகப் பட்டது என் தாத்தாவுக்கு என்னை விட என் அண்ணன் மேல் பிரியம் அதிகம் என்பதுதான்.  அவருக்குப் புத்தகங்கள் என்றால் பிடிக்கும்.  பாட்டு, நாடகங்களும் கூட.  அவருக்குக் கதைகள் படித்துக் காட்ட வேண்டியது என்னுடைய ஒரு வேலை. நேற்று வாசித்த ஜெயமோகனுடைய அறம் கதையில் வரும் "லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணுபாப்பான்னு சொல்லுவாங்க" என்ற வரி மனதில் நின்று யோசிக்க வைத்துக்கொண்டே இருந்தது.  என் தாத்தா பல புத்தகங்கள் வைத்திருந்தார்.  பலவற்றை வீட்டில் யாரும் படிப்பதேயில்லை.  நான் படிக்க முயன்ற சில புத்தகங்கள் எனக்கு சுவாரசியமாய் இல்லை என்பதை விட எனக்குப் புரியவில்லை என்பதே சரியாக இருக்கும்.  என் அப்பாவுக்கு படிப்பதில் ஆர்வம் கொஞ்சம் உண்டு என்றாலும் என் தாத்தாவைப் போல் புத்தகங்கள் எதுவும் அவர் சேர்த்து வைக்கவில்லை. எனக்கு 18 வயது இருக்கும் போது என் தாத்தா இறந்தார்.  அந்த சமயத்தில் அவருக்கு வயதாகி உடல் நலமும் சரியில்லாமல் இருந்ததால் முன்பு மாதிரி அவரிடம் என்னால் நெருக்கமாய் இருக்க முடியவில்லை.  அவரைத் தவிர்த்தே