இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மன்மதன் அம்பு

காதலா காதலா மாதிரியான கமல் படங்களைப் பார்த்தவர்களுக்கு மன்மதன் அம்பு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தாத படம் தான்.  காதலா காதலா போன்ற படங்களை ரசித்தவர்கள் மன்மதன் அம்பையும் ரசிப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.  புரிந்துகொள்ள அவகாசம் கொடுக்காமல் வரிக்கு வரி நகைச்சுவையாக இருக்கும் வழக்கமான் கமல் படம்.  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.  இன்னும் ஒருமுறை கூட பார்க்கும் அளவுக்குப் பிடித்திருக்கிறது :-) படத்தில் எனக்குப் பிடித்திருந்த இன்னொரு விஷயம் சின்னச் சின்ன விஷயங்களில் லாஜிக் சரியாக இருந்தது.  உறவுகளில் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், பெரிய விஷயங்களில் பொய் சொல்பவர்களை நாம் எளிதில் மன்னிப்போம், ஆனால் சின்னச் சின்னப் பொய் சொல்பவர்களை நம்மால் மன்னிக்க முடியாது.  அதே மாதிரி, முக்கியக் கதை கொஞ்சம் கிழிஞ்ச துணி மாதிரி இருந்தால் கூட சின்னச் சின்ன விஷயங்கள் சரியாய் இருந்ததால் எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.  ஒரு உதாரணம்.  ஒரு கார் விபத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த ஆண் சின்ன அடியுடன் பிழைத்துக் கொள்கிறான், ஆனால் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் செத்துப் போகிறாள்.  அதெப்படி சாத்தியம் என்று

கடலோடி

"மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..." என்று வடிவேலு சொன்னதும் பளார் என்று ஒரு அறை விட்டு "ஆடு எப்படிடா பேசும்?" என்று கேட்பார் கவுண்டமணி.  இந்தக் காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது எஸ் ராமகிருஷ்ணனின் கோடுகள் இல்லாத வரைபடம் என்ற புத்தகத்தில் "கடலோடி" என்ற வார்த்தையைப் படித்ததும்.  (கடல்ல எப்படிடா ஓடுவ?) நாடு நாடாக ஓடுபவன் நாடோடி, கடல் கடலாக ஓடுபவன் கடலோடி.  கடலோடி என்ற வார்த்தையை எண்ணிப் பார்க்கையில் மனதில் உண்டாகும் அதிர்வுகள் என்னை ஆச்சர்யப்பட வைக்கின்றன.  நாடோடியாக அலைந்து திரிய வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்த எனக்குள், கடலோடியாக அலையும் கனவு எழத் தொடங்கி விட்டது.  மனிதனே எல்லா விலங்குகளையும் விட தொலைதூர ஓட்டத்தில் சிறந்தவன் என்று என் நண்பர் ஒருமுறை சொன்னார்.  மான்களை வேட்டையாட அவற்றை விடாமல் துரத்துவதே போதுமாம்.  ஓடிக் களைத்த மானை மிக எளிதாகக் கொல்லலாம்.  ஆனால் நம்பிக்கையும் பொறுமையும் அவசியம் -- விடாமல் மானின் பின்னே சென்று கொண்டே இருக்க வேண்டும்.  அது போலத்தான் கடல் கடப்பதும்.  எத்தனை பெரிய நீர்நிலை கடல்!  அத

நினைவுகள்

நல்ல அலைகள் வருகையில் சிரித்தும் கெட்ட அலைகள் வருகையில் முறைத்தும் சில மோசமான அலைகள் வருகையில் ஓடிப்போய் வெளியே நின்றுமாய் கடலில் கால் நனைக்கிறேன் நான்.

கடந்தகாலம்

பழைய அலைகள் சொல்லிச் சென்று புதிய அலைகளின் சத்தத்தில் மறக்கப்பட்ட சிறியதும் பெரியதுமான கதைகள்.

எனக்கு வேணும், எனக்கு வேணும்

சத்தியமா காப்பி-பேஸ்ட் பண்ணலைங்க! இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டே

பேச்சு வார்த்தை

மேஜையைச் சுற்றி அமர்ந்து சொல்ல வந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன நான்கு ஒலிபெருக்கிகள்.

சரியா தவறா

என்னை நானே பல முறை கேட்டுக் கொண்ட கேள்வி இது: "இவ்விரண்டில் எதைச் செய்வது சரி?"  கணந்தோறும் நாம் முடிவெடுக்கிறோம், தேர்வு செய்கிறோம்.  எதைச் சாப்பிடுவது, எங்கு போவது, யாருடன் பேசுவது, எதைச் சொல்வது, எதை சொல்லாமல் விடுவது என்று எத்தனையோ விஷயங்களைப் பற்றி யோசித்தோ யோசிக்காமலோ நாம் முடிவெடுக்கிறோம். சில முடிவுகளை நிறைய யோசித்தே எடுப்போம், அவை "முக்கியமானவை" என்பதால்.  என்ன படிப்பது, எந்த நிறுவனத்தில் வேலை செய்வது, யாரை மணம் செய்து கொள்வது, என்பது போன்றவை.  இது மாதிரி யோசித்து முடிவு செய்பவையே நமது கொள்கைகள் மற்றும் வாழ்க்கை வழிமுறைகள். சுகி சிவத்தின் பகவத் கீதை பற்றிய சொற்பொழிவு ஒன்றைக் கேட்டுக் கொண்டே இன்று அலுவலகம் வந்தேன்.  பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கையில் கண்ணன் கர்மபலனைத் துறக்கும் யோகத்தைப் பற்றியும் கர்மத்தையே துறக்கும் யோகம் பற்றியும் உபதேசம் செய்கிறார்.  அர்ஜுனன் கேட்கிறான், இந்த இரண்டில் எது சரி, எதனைப் பின்பற்ற வேண்டும் என்று.  அவ்விரண்டுமே சரியான பாதைகளே என்று கண்ணன் பதில் சொல்கிறார். இதைச் சொல்லி விட்டு சுகி சிவம் சொல்கிறார்: நமக்கு எப்ப

போய் வேலையைப் பாருடா

பல வருடங்களுக்கு முன்பு -- பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன்.   சாலமன் பாப்பையா ஒரு பட்டிமன்றத்தில் பேசும்போது, வேறு என்னவோ சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் வேடிக்கையாகச் சொன்ன வாசகம் இது: "டேய்... போடா, போய் வேலையைப் பாருடா!"  அவர் சொன்ன விதம் பிடித்திருந்ததால் என் மனதில் அப்படியே நின்று விட்டது.  சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நானும் அதை மற்றவரிடம் கேலியாகச் சொல்லிக் கொண்டேன்.  இது நிற்க. மனித வாழ்க்கை என்று அமைந்து விட்டாலே கஷ்டங்களும் வேதனைகளும் சாதாரணம் தான்.  பல நேரங்களில் ஏதேனும் கவலையை நினைத்து வேலையில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறேன்.  அப்படி வேலையில் கவனம் குறைவதால் சில வேலைகள் முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்று விடும்.  அல்லது கொஞ்சம் குறைவான தரத்தில் அதை செய்திருப்பேன்.  இப்படித் தான் பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. இப்போது கொஞ்ச நாள்களாகவே சொந்த வாழ்க்கை எப்படிப் போனாலும் அதைப்பற்றி ரொம்பவும் கவலைப் படாமல் ஒழுங்காக வேலை செய்து வருகிறேன்.  இரவில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது அந்த நாளில் செய்த வேலை, அதன் தொ

இராட்டினம்

எப்படி மேலே போகிறோம் என்றோ எதற்குக் கீழே இறங்கினோம் என்றோ கேள்வி கேட்பதில்லை எவரும்.

களவு

கையும் களவுமாய் என்னிடம் நானே பிடிபட்டதும் சிரிப்பு தான் வந்தது. உடனே கடந்தகால களவுகள் எல்லாம் இல்லாமல் மறைந்தன.

எந்திரன்

எந்திரன் படத்தின் சில பாடல்களை ஒரே ஒருமுறை கேட்டதும் எனக்குத் தோன்றுவது இதுதான்: சுஜாதாவின் ஆன்மா ஷங்கரை மன்னிக்குமா என்று தெரியவில்லை.  மன்னிக்கும் என்று நம்புவோம்.

விபத்து

காயம் பட்டதும் கட்டுப்போட்டுக் கொண்டதும் அந்த ஒரு முறை மட்டும் தான். அன்றிலிருந்து அவ்வழி போகையிலெல்லாம் தடுமாறி விழுகிறேன். எழ முயன்று முடியாமல் தெரு நடுவில் கிடக்கிறேன். அவ்வழி போகும் ஒவ்வொரு முறையும்.

ஊனம்

பகலை ஒளி என்றும் இரவை இருள் என்றும் பொதுமைப் படுத்துவதில்லை கண்ணற்றவர்.

கொள்கை

சுவர்களைக் காட்டிலும் கதவுகள் பயனுள்ளவை. ஆயினும் சந்தர்ப்பவாதம் தப்பென்றே சாதிப்போம். நம் கொள்கை அப்படி. சுவரில் சிறுநீர் கழிக்கலாம். காதலி பெயரைக் கிறுக்கலாம். போஸ்டர் ஒட்டலாம். ஸ்டம்ப் வரைந்து கிரிக்கெட் விளையாடலாம். சிகரெட் அணைக்கலாம். கதவிற்குக் காவலாள் போட வேண்டும். முடியாதெனில் பூட்டேனும் வாங்க வேண்டும். வேறு வேறு கதவை வேறு வேறு மாதிரி பூட்ட வேண்டும் திறக்க வேண்டும். எவனும் எட்டிப் பார்க்கிறானா என்று பார்க்க வேண்டும். நாமும் எட்டிப் பார்க்கலாம் தான் - ஆனால் கொள்கை இடம் கொடுக்குமா தெரியவில்லை.

முகவரி

கடிகாரம் - முட்கள், நதி - நீர், இரத்தம் - நான். முகவரியற்றது முகவரி பெறும் கணம் முகவரியுடையது பொருளிழக்கும்.

சுகந்தம்

என்னைப் போலவே இன்னும் நூறு பேர் இதே மரத்தில் இருந்தாலும் என் வாசனை தனிப்பட்டது. தனித்துவத்தின் காரணம் எந்தெந்த விதை, எந்தெந்த வேர், எந்தெந்த நீர், எந்தெந்த மண்? விடை சொல்வது யார்?

கடமை

தன் நாற்றம் பொறுக்காது வேலை நிறுத்தம் செய்த சாக்கடை இன்னும் அதிகமாய் வெறுக்கப்பட்டது.

விதிவிலக்கில்லாத விதி

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்லே ஒன்னு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்திலே விதி வழி சொல்லி போட்டான் மனுஷப் புள்ள விதி விலக்கில்லாத விதியுமில்லே தல்ஸ்தோய் காலத்தில் இருந்த அதே மனநிலையில் தான் வைரமுத்து காலத்து காதலர்களும் இருக்கிறார்கள்.  ( இருக்கிறோம் என்று சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன்.)

வளர்ச்சி

ஒவ்வொரு முறை காற்றடிக்கையிலும் நிறைய நிறையப் பூ உதிர்த்து காற்றெல்லாம் மணம் நிறைத்து பூவால் மண் மறைத்தது அருவிக் காலத்தில். உயிர்வாழும் ஏக்கத்தில், பூவோடு இலையெல்லாம் உதிர்த்தெறிந்து மொட்டை மரமாய் நின்றாலும் நிழல் கொஞ்சம் கொடுத்தது ஆற்றுக் காலத்தில். பூவும் பழமும் விதையுமெல்லாம் மண்ணோடு போவது அறிந்து பட்ட மரம்போல் ஆனபின்பும் என்றேனும் ஒன்றிரண்டு பூப்பூப்பது கடற் காலத்தில்.

முடிவு

அத்தனை உயிர்களும் மூழ்கி மரித்த பின்னரும் பெருகிக்கொண்டே போன வெள்ளத்தில் தற்கொலை செய்துகொண்ட பிணம் ஒன்று கூட இல்லை.

மாந்தோப்பு

முள்வேலி சூழ்ந்த தோப்பிற்குள்ளே கொத்துக் கொத்தாய்த் தொங்கும் பழங்களை மறைத்து வைக்கத் தெரியாத மாமரங்கள்.

விதையே மரம்

என் மனதில் இக்கணத்திலிருக்கும் வெறுப்பெனும் விதையை உற்று நோக்கிச் சொல்கிறேன், "பல்கிப் பெருகி வனமாய் ஆவாய்". விதையிலிருந்து விதை முளைப்பதில்லை.  வெறுப்பாகிய விதை வளர்ந்து அழிந்து விருப்பாகிய மரமாய் உருமாறும்.  விதை மரமாயும், மரம் மேலும் ஆயிரமாயிரம் விதையாயும் மாறும். "என்னிலேயே இருந்து, வனமாய் ஆவாய், என் பிரிய விதையே!"

பிரபஞ்சங்கள்

நண்பன் சொன்னான், "பிரபஞ்சம் மிகப் பெரியது." நான் சொன்னேன், "உன் பிரபஞ்சம் பிரம்மாண்டமானது என்று சொல்." "எல்லோருடையதும் இந்த ஒரே பிரபஞ்சம் தானே?" "இல்லை.  எத்தனை ஜோடிக் கண்கள் உள்ளனவோ, அத்தனை பிரபஞ்சங்கள் உள்ளன."

சுதர்மம்

உனக்கு வருவதை நீ செய். இறைத்தோறும் ஊறும் கிணறு. இறைத்தோறும் காலியாகும் குடம்.

கருடன் சொன்னது

அந்த வெள்ளைக்காரன் மதிக்கத்தக்க தோற்றத்துடன் தான் இருந்தான்.  ஏன் போலீஸ் கூட்டிப் போனார்கள் எனப் புரியவில்லை.  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பேசுவதைக் கேட்டதில் தெரிய வந்தது.  பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டானாம்.  இரத்தமும் சதையுமான ஒரு மனிதன் ஒரு முப்பது பக்கப் புத்தகமில்லாமல் செல்லுபடி ஆவதில்லை. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.

சக பயணி்

ஒரே விமானம்தான் என்றாலும் அவரவர்க்கு அவரவர் இருக்கை. சிலருடைய ஜன்னலில் விமானத்தின் இறக்கைகள் தெரியும். சிலரது ஜன்னலில் தெரிவதில்லை. சிலர் ஒன்றுக்குப் போனால் கூட இரண்டு பேர் எழுந்து வழிவிட வேண்டும். சிலரால் தூங்க முடிகிறது. சிலர் புத்தகங்களில் மூழ்கிப் போகிறார். சிலர் படம் பார்க்கிறார். ஒரே விமானத்துக்குள் ஓராயிரம் தனிப்பட்ட பயணங்கள். ஒரே கட்டிலில் தூங்கியபோதும் இருவருக்கும் வேறு வேறு கனவு. வேறு வேறு வாழ்க்கை.

நீர்ச்சறுக்கு

காற்றடைத்த பையில் ஏறி அமர்ந்தேன். தயாராவதற்குள் வழுக்கி இறங்கியது. சுற்றிலும் மூடிய சறுக்கல். ஒரே கும்மிருட்டு. கடந்த பின்பே உணர்ந்துகொண்ட திருப்பங்கள். நிர்ணயிக்கப்பட்ட பாதையில் படுவேகமாய்ப் பயணமானேன். ஏதோ வெளிச்சம் போல் தெரிந்தது. கண்கொண்டு காணுமுன் தொப்பென்று விழுந்தேன். என்னைச் சுமந்த பை நீரில் மிதந்தது. மென்தென்றல் வீசியது. பரந்த ஆகாயம் வெறித்துப் பார்த்தது. தணியாத வேட்கை உந்தித்தள்ள வேறொரு பையுடன் கிளம்பினேன். மீண்டும் ஒரு முறை!

காடு மலை எல்லாம் தேடிட்டேன்

"காடு மலை எல்லாம் தேடிட்டேன், ஒரு தங்கமான டீ ருசிக்காக" என்ற வசனம் எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்குன்னு தெரியலை.  ஒவ்வொரு இண்டர்நெட் கனெக்ஷனாக மாறி இன்று வரையில் எதிலுமே நிம்மதி இல்லாத எனக்கு அடிக்கடி அந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது. நான் இருப்பது ஹைதராபாத்.  இது வரை முயற்சி செய்து மண்ணைக் கவ்விய திருப்தியடையாதவை இவை: சிஃபி.  256kbps தான் அதிகபட்ச வேகம்.  யூடியூப் வீடியோவெல்லாம் பார்ப்பதற்கு சாமியார் அளவுக்குப் பொறுமையும் நேரமும் வேண்டும். பி.எஸ்.என்.எல். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், நல்லாத் தான் இருக்கும்.  திடீர் திடீர்னு ஒரு அஞ்சு நிமிஷம் சம்பந்தமே இல்லாம கனெக்ஷன் கட் ஆகுறதை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். டாடா நொண்டிகாம்.  சீ, இண்டிகாம்.  ஊர்ல யாரும் இண்டர்நெட் யூஸ் பண்ணலேன்னா உங்களுக்கு நல்லா இருக்கும்.  என்னது, சாயங்காலம் ஏழு மணிக்கு இண்டர்நெட் யூஸ் பண்ணுவீங்களா?  அடப்போங்க சார்.  ஒரு பத்தரை மணிக்கு மேல ட்ரை பண்ணிப் பாக்குறது! ரிலையன்ஸ் நெட்கனெக்ட்+.  இன்னைக்குத்தான் வேலை பாக்க ஆரம்பிச்சிருக்கு.  3Mbps-ல வேலை பாக்குறதைப் பாத்து கண்ணீர் மல்க VPN-ல கனெக

விசும்பு

ஐம்பூதங்களில் ஒன்றாக ஆகாயத்தையும் நினைத்து வந்தேன்.  ஜெயமோகன் மறுபிறப்பு பற்றிய ஒரு கேள்விக்கு அளிக்கும் பதிலில் இவ்வாறு சொல்கிறார்: ஐம்பெரும்பூதங்களால் [நிலம்,நீர்,எரி,வளி,விசும்பு] ஆனது இந்த உடல்.  மரணத்தில்  ஒவ்வொன்றும் அந்தந்த பூதத்தில் கலக்கின்றன. உயிர் ஐந்தாவது பூதமாகிய  விசும்பில் அல்லது சூனியப்பெருவெளியில் கலந்து விடுகிறது. ஐந்தாவது பூதம் ஆகாயம்.  வானம் அல்ல... அது விசும்பு -- இந்தப் பிரபஞ்சத்தின் பரந்த வெளி.  நாம் கண்ணால் காணும் ஆகாயத்தைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு, பல லட்சம் மடங்கு பெரியது!

பேச்சுப்போட்டி

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது சில பேச்சுப் போட்டிகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.  "பேச்சுப்போட்டின்னா என்ன?" என்று நான் கேட்டதற்கு, "ஒரு தலைப்பு கொடுப்பாங்க, அதைப் பத்தி மேடையில பேசணும்" என்று மட்டும் சொன்னார்கள். போட்டியில் பங்குகொள்ள முதலில் பெயர் கொடுத்த பின்புதான் அதை எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள்.  இரண்டிலிருந்து மூன்று பக்கம் வரை இருக்கும் நீளமான கட்டுரையை மனப்பாடம் செய்து மேடையில் ஒப்புவிக்க வேண்டும்.  அப்படித்தான் எனக்குப் புரிந்தது அப்போது.  பேச்சுப்போட்டிகளில் வரிசையாகப் பங்குகொண்டு, மீண்டும் மீண்டும் தோற்கும்போது கூட எனக்குத் தெரியவில்லை, ஒப்புவிப்பது அல்ல போட்டி என்று. இதெல்லாம் முடிந்து வருடங்கள் ஆன பிறகுதான் தெரிய வந்தது பேச்சுப்போட்டி என்பது சொற்பொழிவுப் போட்டி என்று.  யாரேனும் ஒருத்தர் என்னுடைய சின்ன வயதிலேயே என்னிடம் சொல்லியிருக்கலாம் -- இளம்பிறை மணிமாறன் மாதிரிப் பேசுவதுதான் போட்டியே அன்றி மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது அல்ல என்று.

இன்று முதல்

பதினோரு மணிக்கு முகூர்த்தம். பத்தரைக்கு மண்டபத்தில் இருந்தேன். அளவுக்கு மீறிய அலங்காரத்தில் உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை. இருட்டில் 3:32 என மணி சொல்லும் பச்சை நிற ஒளியை வெறித்தவாறு மீண்டும் அதே கேள்வியை நினைக்கிறேன். உனக்கும் எனக்கும் இடையில் என்ன உறவு இனி?

இன்னமும் காணாமல் போகாதவர் பற்றிய அறிவிப்பு

ஐந்தடி நான்கு அங்குலம் நல்ல சிவப்பு மெலிந்த தேகம் அசட்டுத் தனமாய் சிரிக்கும் ஒரு புகைப்படம் கீழே முகவரியும் தொலைபேசி எண்ணும். "மணமகன் தேவை"க்கும் "காணவில்லை"க்கும் சிறிதளவு ஒற்றுமை வார்த்தையளவில் உண்டு. "போட்டோ பாத்தியா, பிடிச்சிருக்கா உனக்கு?" கேட்கும்போதுதான் தோன்றும், "காணவில்லை" எவ்வளவோ தேவலையோ என்று.

காதலியின் திருமணம்

அத்வைதியான சுண்டுவிரல் அழுகிறது மோதிரம் தனக்கன்றி மோதிரவிரலுக்குக் கிடைத்ததேயென்று.

நிலா மேலே தான் இருக்கிறது

நிலவில் இருக்கும் தோழிக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பேன், நிலா மேலேயும் பூமி கீழேயும் தான் இருக்கின்றன என்பதை!