இடுகைகள்

ஏப்ரல், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்றாம் காதல்

"Being The One is like being in love. No one can tell you you're in love. You just know it." என் முதல் காதலை நான் கண்டுகொண்ட தருணம் இன்னும் நினைவிலிருக்கிறது. பாயில் புரண்டு புரண்டு படுத்து, தூக்கம் பிடிக்காமல் அவளையே நினைத்து மனம் புலம்பிக் கொண்டிருந்த பொழுதுகள். காதல் தோல்வி என்று அதை அழைக்கப் பிடிக்காமல் "ஏற்கப்படாத காதல்" என்ற பெயரை அதற்குச் சூட்டிக்கொண்டு கைக்கிளைத் திணைப் பாடல்களை படித்துப் பார்க்கலாமா என்று திரிந்த நாட்கள் பல. அவள் பெயரையே சொல்லிப் புலம்பி அப்படியே தூங்கிப்போன நாட்கள் பல. அந்த கனத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத அந்த ஓர் இரவு இன்னமும் நினைவிலிருக்கிறது. கண்மூடித் திறக்கும் முன் இரண்டாம் காதலில் விழுந்து விட்டிருந்தேன். இரண்டு பேரையுமே உயிர் உருக நினைக்கும் கணங்கள் வாய்த்தன. அப்போது [சிந்து பைரவி] ஜே.கே.பி சிந்துவின் மேலும் பைரவியின் மேலும் ஒரே நேரத்தில் காதல் வயப்பட்டிருந்தது ஒரு புதிய ஒளியில் தெரிந்தது. என்னுடைய இரண்டு காதலுமே ஏற்கப்படாமல் போனது மனதில் ஆறாத காயம் ஏற்படுத்தின என்பது உண்மைதான். ஆனால் காயங்களெல்லாமே தீங்க