இடுகைகள்

ஜனவரி, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதிகள் இருந்ததடி பாப்பா

நான் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் என்னுடைய தமிழ் வாத்தியார் என்னுடைய தாத்தா பெயரைக் கேட்டார். (என் தாத்தா பெயரை அவர் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவர் ஒரு அரைவேக்காடு என்பதால் இதையெல்லாம் கேட்பது வழக்கம் தான்.) எப்போதும் என் தாத்தா தன் பெயரைச் சொல்வதுபோல் நானும் "மாடசாமி நாடார்" என்றேன். உடனே சுதாரித்துக் கொண்டு "மாடசாமி" என்று மீண்டும் சொன்னேன். ஏனென்றால் எனக்கு சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுக்கப் பட்டது, "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று. என் நண்பர்கள் பலரையும் போல நானும் ஐாதியைப் பற்றிப் பேசுவதில்லை என்று தீர்மானமாக இருந்த காலம் அது. ஆகவேதான், உடனே அவசரப்பட்டு என் தாத்தாவின் பெயரிலிருந்து ஐாதியை நீக்கிச் சொன்னேென். இது நடந்து ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்து இப்போது ஐாதி விஷயத்தில் என் கருத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என் தாத்தா வாழ்ந்த காலத்தின்படி பார்க்கையில் அவரது முழுப்பெயர் என்பதே அவரது ஐாதியின் பெயரும் சேர்ந்ததுதான். எனக்குத் தெரிந்த வரையில் அவர் தன் பெயரை ஐாதியைச் சேர்க்காமல் சொல்லிக்கொண்டதே இல்லை. "ஐாதி வேண்