இடுகைகள்

2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரலாறு -- God Father

மட்டமான கதை, இயக்குநரின் கற்பனையிலன்றி வேறெங்கும் பார்க்கவே முடியாத கதாபாத்திரங்கள், ஹீரோயின் என்றால் ஹீரோவுடன் டான்ஸ் ஆடுபவர் என்ற இலக்கணத்தை மீறாத ஹீரோயின், யதார்த்தத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத காட்சிகள் என்று ஒரு அமர்க்களமான படத்துக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் நிறைந்த "வரலாறு" திரைக்காவியத்தை, K.S. ரவிக்குமார் எடுக்கும் படங்களைப் பார்ப்பதில்லை என்ற தீர்மானத்துடன் இருந்த என்னை வற்புறுத்திப் பார்க்க வைத்த நண்பருக்கு ஒரு நன்றி ;-)

நட்பின் மரணம்

சில மாதங்களுக்கு முன் Capote என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் அதுவும் ஒன்று. ஓஷோவின் ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. "சிலவற்றைப் பார்க்கையில் அழகாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உங்களுக்குள் இருக்கும் மற்றொரு அழகான விஷயத்தை அது ஒத்திருக்கிறது" என்று சொல்கிறார் ஓஷோ. அதுபோலத்தான் திரைப்படமும் இலக்கியமும் போலும். Capote படத்தில் ஒரு காட்சியில், பெரி (Perry, மரணதண்டனைக் கைதி) படத்தின் நாயகனான கபோடியிடம் கூறுவான், "You pretended to be my friend" என்று. அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. வாழ்க்கையில் நம்மை பாதிக்கும் ஓரிரு காட்சி/நிகழ்ச்சிகளை மட்டும் மனம் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறது. அந்த காட்சியும் எனக்கு அப்படித்தான். ஒரு கதாபாத்திரத்தின் நிலையில் நிஜ வாழ்க்கையில் நாமும் எப்போதேனும் இருந்திருந்தால், அந்தக் காட்சி, வசனங்களால் மனதில் ஏற்படும் பாதிப்புகளை என்னால் வார்த்தையில் வெளிப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறை அதை நினைக்கும் போதும், நானும் அதே வார்த்தைகளைச் சொல்கிறேன்

தனித்தமிழில் எனக்கு உடன்பாடில்லை

தனித்தமிழில் பேசுவது மற்றும் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. வாழ்க்கையின் மிக முக்கியமான செயல்பாடாக நாம் கற்றலைக் கொண்டுள்ளோம். கற்றல் என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பதில் மட்டும் இல்லை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். நண்பருடன் பேசும் போதும், சினிமா பார்க்கும் போதும், நம் கம்பெனியில் இருக்கும் அர்த்தமில்லா நடைமுறைகளையும் விதிமுறைகளையும் எண்ணி வியக்கும் போதும், ட்ராஃபிக்கில் குறுக்கே வருபவனைத் திட்டும் போதும், இன்னும் பலப்பல அன்றாடக் காரியங்களின் போதும் நாம் கற்றுக் கொள்கிறோம். நம்முடைய கற்றலானது நம்முடைய மேல்மட்ட மனது, அறிவுக்கு வராமல்/தெரியாமல் போகலாம்; ஆனால் நாள் முழுவதும் நாம் கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். கற்றலுக்கு நாம் பயன்படுத்துவது பல மொழிகள். முக்கியமாக தமிழும் ஆங்கிலமும். கற்ற மொழியிலே சிந்திப்பதும், நம்மை வெளிப்படுத்திக் கொள்வதும் பல நேரங்களி்ல் எளிதாக இருக்கிறது. வேலை/உணவுக்காக ஆங்கிலம் படிப்போம், ஆங்கிலத்தில் சிந்திப்போம், ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்க்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்வோம் என்பது எனக்கு ரொம்ப அந்நியமாகவே படுகிறது. பல ஆங்கில வா